இ மெயிலின் வயது 32: இ மெயிலைக் கண்டுபிடித்தவர் தமிழர் என்பது தெரியுமா உங்களுக்கு?
நியூயார்க்: இப்போது நாம் "வாழ்ந்து" கொண்டிருக்கிற இமெயில் 32 வயதைத் தொட்டுள்ளது. 10 வயது பையன் முதல் 100 வயது தாத்தா வரை இன்று இமெயிலில் புழங்காத மனிதர்களே இல்லை என்ற இந்த இன்றைய நிலையை 32 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய காரணகர்த்தா ஒரு தமிழர் - வி.ஏ. சிவா அய்யாத்துரை.
இவர்தான் முதல் முதலில் எலக்ட்ரானிக் மெயில் எனப்படும் இமெயிலை உருவாக்கி உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். முறைப்படி தனது கண்டுபிடிப்புக்கு காப்பிரைட் அதாவது காப்புரிமையும் பெற்றவர்.

பள்ளி மாணவராக...
பள்ளிப் பருவத்திலேயே அய்யாத்துரை இமெயிலைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டாராம். ஆனால் 1981 ம் ஆண்டு முதல்தான் இதை வெளியுலகுக்கு அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இமெயிலின் தோற்றம்...
சிவா அய்யாத்துரை தமிழராக இருந்தபோதிலும், பல காலத்திற்கு முன்பே அமெரிக்காவில் போய் செட்டிலானவர். 1978ம் ஆண்டு அவர் மேல்நிலைப்பள்ளி மாணவராக இருந்தபோது இமெயிலை கண்டுபிடித்து பயன்படுத்த ஆரம்பித்தார்.

இன்டர் ஆபிஸ் மெயில் சிஸ்டம்....
அவர் கண்டுபிடித்த மெயிலுக்கு வைத்த பெயர் இன்டர்ஆபீஸ் மெயில் சிஸ்டம். அதுதான் இமெயிலின் பிறப்பாக அமைந்தது.

விருதும், பாராட்டும்...
1981ம் ஆண்டு இந்த இமெயிலை வெளியுலகுக்கு அவர் அறிமுகப்படுத்தினார். இதற்காக அவருக்கு வெஸ்டிங்ஹவுஸ் அறிவியல் திறன் விருதும் கிடைத்தது. அதன் பின்னர் 1982ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி இந்த இமெயில் கண்டுபிடிப்பை அங்கீகரித்த அமெரிக்க அரசு அவருக்குப் பாராட்டும் தெரிவித்தது.

ஒப்படைப்பு...
அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள லிவிங்ஸ்டன் உயர் நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதுதான் தனது சொந்த உபயோகத்திற்காக இந்த மின்னணு மெயில் முறையை உருவாக்கினார் அய்யாத்துரை. பின்னர் அதை நியூஜெர்சி, மருத்துவ பல்கலைக்கழகத்திற்கும் சொல்லிக் கொடுத்து அவர்களிடம் அதை ஒப்படைத்தார்.

பேடன்ட் மட்டும்...
அய்யாத்துரை இமெயிலைக் கண்டுபிடித்த சமயத்தில் சாப்ட்வேர் பொருட்களை காப்புரிமை பெற சட்டத்தில் இடம் இல்லாத நிலை இருந்தது. வெறும் பேடன்ட் மட்டுமே அப்போது நடைமுறையில் இருந்தது.

இமெயிலின் தந்தை...
இமெயிலை முதன் முதலில் உருவாக்கியவர் ய்யாத்துரைதான் என்றாலும் கூட மேலும் சிலர் தாங்கள்தான் இமெயிலை கண்டுபிடித்ததாக பின்னாளில் உரிமை கோரவே சர்ச்சைகளும் கிளம்பின. ஆனாலும் அய்யாத்துரைதான் இமெயிலின் தந்தை என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழரின் உழைப்பு...
இன்றைய இமெயில் காலத்தில் நாம் அனுப்பும் ஒவ்வொரு இமெயிலிலும் அய்யாத்துரையின் உழைப்பு அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications