பாகிஸ்தான் வாழ்த்தாவிட்டால் என்ன வருங்கால பாக். 'விண்வெளி வீராங்கனை' பாராட்டியிருக்கார் பாருங்க!
இஸ்லாமாபாத்: இந்தியாவின் மங்கள்ன்யான் வெற்றியை பல உலக நாடுகள் வாழ்த்தியுள்ள போதிலும் இதுவரை பாகிஸ்தான் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக யாரும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் விரைவில் பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை அடையக் காத்திருக்கும் நமீரா சலீம் என்பவர் இந்தியாவை வாழ்த்தியுள்ளார்.
மங்கள்யானின் வெற்றி, பிராந்தியத்தின் வெற்றி என்று அவர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
முதல் முயற்சியிலேயே மங்கள்யான் வெற்றி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது என்றும் நமீரா கூறியுள்ளார்.

ஒரு சாட்டிலைட் கூட இல்லாத பாகிஸ்தான்
பாகிஸ்தான் 1961ம் ஆண்டு முதல் விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இதுவரை ஒரு செயற்கைக் கோளைக் கூட அது ஏவியதில்லை.

முதல் விண்வெளி வீராங்கனை
இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண் நமீரா சலீம், விரைவில் பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை அடையப் போகிறார். விண்வெளிப் பயணத்திற்கு அவர் தயாராகி வருகிறார்.

2015ல் விண்வெளிப் பயணம்
2015ம் ஆண்டு அமெரிக்கவின் ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் காலக்டைஸ் விண்வெளித் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருக்கிறார் நமீரா.

இந்தியாவுக்குப் பாராட்டு
நமீரா தற்போது இந்தியாவின் மங்கள்யான் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவின் சாதனை இப்பிராந்தியத்தை பெருமைப்படுத்தியுள்ளது.

தெற்காசியாவுக்கு பெருமை
மேலும் தெற்காசியாவுக்கே இது பெரும் ஊக்கத்தைக் கொடுப்பதாக அமையும்.

இஸ்ரோவைப் பாராட்டுகிறேன்
இஸ்ரோவையும், அதன் விஞ்ஞானிகளையும், ஆய்வாளர்களையும் நான் பாராட்டுகிறேன். மேலும் குறைந்த செலவில் இதைச் சாதித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது என்றார் நமீரா.












Click it and Unblock the Notifications