தாயை பற்றி பேசியபோது கண்ணீர் சிந்திய மோடி.. பேஸ்புக் தலைமை அலுவலகமே நிசப்தமானது
சிலிக்கான்வேலி: பேஸ்புக் தலைமை அலுவலகம் சென்ற மோடி, டவுன்ஹாலில் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பெற்றோர் குறித்து பேசிய மோடி குரல் தழுதழுத்தது. அவரது கண்களில் கண்ணீர் வடிந்தது.
டவுன்ஹாலில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, பேஸ்புக் தலைவர் மார்க் ஜுகர்பர்க், மோடியிடம் அவரது பெற்றோரின் பங்களிப்பு குறித்து ஒரு கேள்வி கேட்டார்.

அப்போது மோடி கூறியதாவது: டீ விற்பனை செய்த நான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக வந்ததை நம்புவது என்பதே கடினமானது. இதற்காக 125 கோடி இந்தியர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
நான் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் இருந்துவந்தவன். எனது வளர்ச்சிக்காக எனது தாய் பல தியாகங்கள் செய்தார். ஒரு மனிதன் வாழ்க்கையில், பெற்றோரும், ஆசிரியர்களும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவர்கள்.
ஒரு தாய் எப்போதுமே தனக்கு என்ன வேண்டும் என்று நினைத்து பார்க்க மாட்டார். தனது பிள்ளை எப்படி வர வேண்டும் என்பதைத்தான் நினைத்து பார்ப்பார்.

எனது பெற்றோர் கிடைத்தவேலையை செய்து என்னை வளர்த்தனர். எனது தாய் கல்வியறிவு இல்லாதவர். இன்று நான் இங்கு பேசுவதையும் டிவி மூலம் பார்த்து, பிறர் சொல்வதை வைத்துதான் அவரால் என்ன நடக்கிறது என்பதை, அறிந்துகொள்ள முடியும்.
பக்கத்து வீட்டுக்கு சென்றுதான் எனது தாய் சமையல் செய்து எங்களுக்கு சாப்பாடு கொண்டுவருவார். தண்ணீருக்காக நெடுந்தூரம் சென்று சேகரித்து வருவார். (இவ்வாறு மோடி பேசியபோது, அவரது நா தழுதழுத்தது. அவரது கண்களில் லேசான கண்ணீர் எட்டிப்பார்த்தது. வலிமையான பிரதமராக அறியப்படும், மோடி, தாயை பற்றி பேசியபோது முழுமையாக உடைந்துவிட்டார். அப்போது, டவுன்ஹாலில் குண்டூசி விழும் சத்தம் கேட்கும் அளவுக்கு நிசப்தம் நிலவியது)
இதன்பிறகு மோடி பேசுகையில், "மோடியின் பெற்ரோர் மட்டுமல்ல, இந்தியாவில் எத்தனையோ பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கனவுகளை நிறைவேற்றுவதற்காக தங்கள் கனவுகளை தியாகம் செய்துள்ளனர்" என்றார்.
நிகழ்ச்சி முடியும்போது, பேஸ்புக் தலைவர் மார்க்கை பெற்றெடுத்ததற்காக அவரது பெற்றோர் பெருமைப்பட வேண்டும். அவருக்காக எழுந்து நின்று மரியாதை செலுத்துங்கள் என்று மோடி கேட்டுக்கொண்டார். எனவே கூட்டத்தார் எழுந்து நின்று மரியாதை அளித்தனர்.
-
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications