ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து ஃபாலுஜா நகரை மீட்டது ஈராக்
பாக்தாத்: ஐ.எஸ். பிடியில் இருந்த முக்கிய நகரமான ஃபாலுஜா நகரை ஈராக் படையினர் மீட்டு உள்ளதாக ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபதி அறிவித்துள்ளார்
ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் ஈராக், சிரியா பகுதிகளைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தைப் பிரகடனப்படுத்தி இருந்தன. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஈராக், சிரியாவில் போரில் குதித்தன. குர்திஸ்தான் படையினரும் துருக்கியும் அமெரிக்காவுக்கு ஆதரவாக ஈராக்கிற்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

தற்போது ஐ.எஸ். பிடியில் இருந்த முக்கிய நகரமான ஃபாலுஜாவை ஈராக் படையினர் மீட்டு உள்ளனர். ஃபாலுஜா நகரின் முக்கிய மருத்துவனை ஒன்றின் வெளியே, ஈராக் நாட்டு கொடியை அசைத்தவாறு தொலைக்காட்சி ஒன்றில் தோன்றி ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபதி, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈராக் படைக்கு வெற்றி கிடைத்துள்ளது.
ஃபாலுஜா நகரை தற்போது பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். மேலும், ஐ.எஸ். அமைப்பினரின் பிடியிலிருந்த ஈராக்கின் மிகப்பெரிய நகரான மொசூலில், பாதுகாப்பு படையினர் ஈராக் கொடியை உயர்த்துவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ராணுவ அதிகாரி ஒருவர், பல வாரச் சண்டைக்கு பிறகு ஃபாலுஜா நகருக்கான போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்திருந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு ஈராக் அரசு இதே போன்று, ஃபாலுஜா நகரை விடுவித்ததாக கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications