4000 வருட பழமையான எகிப்து மண்டையோடு.. பல்லை வைத்து மொத்த வரலாற்றையும் சொன்ன எஃப்.பி.ஐ!
எகிப்து பிரமீடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு யாருடையது என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
நியூயார்க்: எகிப்து பிரமீடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு யாருடையது என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
இந்த மண்டை ஓடு சரியாக 103 வருடங்களுக்கு முன்பு ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 4000 வருடம் பழமையானது என்று கூறப்படுகிறது.
இதை நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு ஆராய்ச்சி செய்து இருக்கிறார்கள். தற்போது இதன் வரலாறு என்ன என்று வியத்தகு கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளது.

பழையது
இந்த மண்டையோடு கடந்த 1915ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த தலை யாருடையதாக இருக்கும் என்று கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த சமாதி ''ஜேஹுடிநாஹ்ட்'' என்ற எகிப்து கவர்னருக்கு சொந்தமானது. இதனால் அவரின் குடும்பத்தை சேர்ந்த யாராவது 4000 வருடங்களுக்கு முன்பு இறந்து போய் இருக்கலாம் அவர்களின் தலையாக இது இருக்கலாம் என்று கருதப்பட்டது.

மோசம்
ஆனால் இதை வைத்து, எந்த விதமான ஆராய்ச்சி செய்தும் கூட தலை யாருடையது என்று கண்டிபிடிக்கப்படவில்லை. ஏற்கனவே இந்த தலை மோசமாக உடைந்து இருந்தது. சிறு ரத்த செல்கள் கூட இதில் காணப்படவில்லை. இது ஆணா, பெண்ணா என்று கூட ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புலனாய்வு அமைப்பு
இதையடுத்து இந்த மண்டை ஓட்டை அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ வாங்கியது. அவர்கள் இதில் கடந்த ஐந்து வருடமாக சோதனை செய்தார்கள். அந்த மண்டை ஓட்டில் இருந்து பல் ஒன்றை எடுத்து அதை பல்வேறு ஆராய்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளனர். இதன் மூலம் நிறைய வரலாற்று தகவல்கள் கிடைக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

100 வருடத்திற்கு பின்
தற்போது சரியாக 103 வருடத்திற்கு பின் இந்த 4000 வருட மர்மம் வெளியே வந்துள்ளது. இந்த தலை முதலில் ஜேஹுடிநாஹ்டின் மனைவியுடையது என்று கூறப்பட்டது. தற்போது இந்த தலையே கவர்னர் ஜேஹுடிநாஹ்டின் தலைதான் என்று புலனாய்வு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதை வைத்து இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் செய்ய இருக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications