For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனடா: தரையிறங்கிய விமானத்தின் வால் பகுதியில் பற்றிய தீ ... 5 பேர் காயம்

Google Oneindia Tamil News

ஒட்டாவா: கனடா விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் வால் பகுதியில் திடீரென பற்றிய தீயால் 5பேர் காயம்டைந்தனர்.

மொராக்கோ நாட்டில் காசாப்லன்கா நகரில் இருந்து 250 பயணிகளுடன் புறப்பட்ட ராயல் ஏர் மரோக் விமானம் கனடா நாட்டின் மோண்ட்ரியல் நகர ட்ருடேயு விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது எதிர்பாராவிதமாக விமானத்தின் வால் பகுதியில் பயணிகளின் உடைமைகளை ஏற்றும் சாதனத்தின் பெல்ட் திடீரென தீப்பற்றிக்கொண்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த பயணிகளும், விமான ஊழியர்களும் அவசர அவசரமாக விமானத்திலிருந்து வெளியேறினர். அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனபோதும் காயமடைந்த 5 பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

இந்த தீவிபத்து குறித்து கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
A fire on the tarmac sent people fleeing a plane at Montreal's Trudeau Airport on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X