வெனிசூலா சிறையில் பயங்கர தீ விபத்து: 8 பெண்கள் உட்பட 17 கைதிகள் கருகி பலி
காரகஸ்: வெனிசுலா நாட்டு சிறையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 கைதிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெனிசூலாவின் வடக்குப் பகுதியில் காரபோபா மாநிலத்தில் உள்ளது டோகுயிட்டோ சிறைச்சாலை. நேற்று அதிகாலை இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் சிறையில் அடைக்கப் பட்டிருந்த கைதிகள் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 9 பேர் ஆண்கள், 8 பேர் பெண்கள்.
மேலும் இந்த தீவிபத்தில் 11 பேர் காயமடைந்தனர். இவர்கள் வேலன்சியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வெனிசுலா நாட்டு சிறைகளில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக நீண்டகாலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. எனவே, அடிக்கடி அங்கு இது போன்ற கைதிகள் உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன.
சிறைச்சாலைகளை மேம்படுத்தும் திட்டத்தை வெனிசுலா அரசு நடைமுறைப்படுத்தவில்லை என மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications