For Daily Alerts
Just In
மெக்ஸிகோ பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து: 14 பேர் பலி; 22 பேர் படுகாயம்
மெக்சிகோவில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் பலியாகினர், 22 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பியூப்லா: மெக்சிகோ நாட்டில் பியூப்லா என்ற மாகாணத்தில் பட்டாசு குடோன் செயல்பட்டு வருகிறது. அந்த பட்டாசு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் அங்கிருந்த வெடி மற்றும் வெடிபொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது.
இந்த தீ விபத்தில் 14 பேர் பலியாகி உள்ளனர். 22 பேர் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
Comments
English summary
14 people were killed and several others were injured in an explosion that ripped apart a fireworks warehouse in Mexico City on Tuesday.
Story first published: Tuesday, May 9, 2017, 20:24 [IST]