இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 55 பேர் விடுதலை !
கொழும்பு: இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 55 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்படுவது தொடர் கதையாகவே உள்ளது.
இந்நிலையில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 55 பேரை அந்நாட்டு அரசு விடுவித்துள்ளது. இலங்கையில் உள்ள ஊர்க்காவல், பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதிகளின் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் பின்னர் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் விடுதலை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பரிந்துரையை ஏற்று மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ராமநாதபுரம்,புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை இந்திய அதிகாரிகளுடன் ஒப்படைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அவர்கள் நாளை தமிழகம் வருவார்கள் வந்து சேர்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இலங்கை திரிகோணமலை மற்றும் மன்னார் சிறைகளில் உள்ள 51 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.