Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீன்களுடன் பாலியல் உறவு.. 58 வயசு பாட்டியின் அக்கப்போரு.. பக்கத்துலஅது யாரு? கோர்ட்டில் பரபர விசாரணை

Subscribe to Oneindia Tamil

ஹோபார்ட்: மீனுடன் பாலியல் உறவு வைத்ததாக 2 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.. இது தொடர்பான விசாரணையும் கோர்ட்டில் பரபரப்பாக நடந்துள்ளது. என்ன நடந்தது? யார் இவர்கள்?

மிருகங்களுடனான உறவு கொள்வது என்பது மிகவும் கொடூரமான நடத்தையாக கருதப்படுகிறது.. இதற்கு கடுமையான தண்டனைகளும் விதிக்கப்படுகின்றன.

Tasmania Woman Fish

இந்தியா போன்ற நாடுகளில், பாலியல் தொடர்பான விஷயங்களை பற்றி குடும்பங்களில் வெளிப்படையாக பேசுவதற்கு பல்வேறு தடைகள் இருப்பதாகவும், பாலியல் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழ்நிலைகளும் பெரும்பாலும் அமைவதில்லை என்பதால், இதுபோன்ற நேரங்களில் மனிதர்களின் பாலியல் உணர்வுகளுக்கு பலியாவது விலங்குகளே என்றும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.

குழந்தையிலிருந்தே குடும்ப வன்முறை, அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுவயதிலேயே பாலியல் வன்கொடுமைக்கு இலக்கானவர்களும் இதுபோன்ற நடத்தை சிக்கல்களுக்கு ஆளாவதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பாலியல் விருப்பம்: விலங்குகளுடன் உறவு வைத்துக்கொள்வதை ஆங்கிலத்தில் பீஸ்டியாலிடி (Beastiality) என்கிறார்கள்.. ஆனால், மிருகத்துடனான புணர்ச்சி என்பது மிகவும் கொடூரமான நடத்தையாக கருதப்படுகிறது. பாலியல் விருப்பத்தை நிறைவேற்றி கொள்வதற்காக விலங்குகளை பயன்படுத்துவது பாலியல் வன்முறையாக என்றும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனைக்கெல்லாம் தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் டாக்டர்கள்.

எனினும், மிருகங்களை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு ஐபிசி சட்டத்தில், 377வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவைத் தவிர, ஜெர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க், சுவிட்சர்லாந்து போன்ற பல ஐரோப்பிய நாடுகளிலும் விலங்குகளுடன் பாலியல் உறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

நாய்கள்:
கடந்த வாரம்கூட, ஆஸ்திரேலியவில், 39 நாய்களை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொன்று, அந்த நாய்களின் சடலங்களை முதலை போன்ற விலங்குகளுக்கு உணவாக்கியிருக்கிறார் ஆடம் என்ற முதலை நிபுணர்.. ஆடமின் செயல்பாடுகள், எந்தவொரு சாதாரண மனித சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை, என்று குறிப்பிட்ட நீதிபதி, ஆடமுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்துள்ளார்.

இந்நிலையில், மீனுடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டதாக, பெண் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.. இந்த பெண்ணுக்கு 58 வயதாகிறது.. டாஸ்மேனியாவை (Tasmania) சேர்ந்த இந்த பெண்ணின் பெயர் கேத்தரின் லீ ஜூன்.

பல்வேறு வழக்குகள்: மீனுடன் இவர் பாலியல் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்திருக்கிறார்.. இந்த பாலியல் உறவை வீடியோவாகவும், எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டு வந்திருக்கிறார்.. இந்த வீடியோவை பார்த்த பலரும் கடுமையான அதிர்ச்சி அடைந்து, புகார்களை தர ஆரம்பித்துவிட்டார்கள்.. இறுதியில் இந்த பெண் மீது பல்வேறு வழக்குகள் சேர்ந்துவிட்டன.

நேற்றைய தினம், ஹோபார்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணைக்கு கேத்தரின் ஆஜரானார்... வழக்கில், பல்வேறு வாதங்கள் நடந்த நிலையில், பிப்ரவரி 2022 மற்றும் ஜனவரி 2023 க்கு இடைப்பட்ட தருணங்களில் இவர் மீனுடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டுள்ளது நிரூபணமாகியிருக்கிறது. இதையடுத்து, இதன் அடுத்தக்கட்ட விசாரணையானது, அக்டோபர் வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

அதிர்ச்சி தகவல்கள்: இந்த பாலியல் வன்கொடுமையில், கேத்தரினுடன் சேர்ந்து இன்னொருவரும் ஈடுபட்டு வந்துள்ளார.. அவரது பெயர் ஆஷ்லே டேவிட் ஹலாம்.... 55 வயதாகிறது.. படகிலேயே மீனுடன் இப்படியான செயலை வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இவர் மீதான குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+