இந்தியரைக் கொன்ற வழக்கு... சவுதியில் 5 பேரின் தலையை துண்டித்து தண்டனை நிறைவேற்றம்
ஜெட்டா: இந்தியர் ஒருவரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு, தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளதாக சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் மேற்கு கடற்கரை நகரமான ஜெட்டாவில், இவ்வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏமன் நாட்டை சேர்ந்த இருவரும், சாட், எரித்ரியா மற்றும் சூடான் நாட்டை சேர்ந்த தலா ஒருவரும் தலை துண்டித்து கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தியர் ஒருவரை ஆயுதங்களுடன் வழிமறித்து கொலை செய்து, கொள்ளையடித்த குற்றத்திற்காக ஐந்து பேரின் தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மட்டும் சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மற்றபடி, கொல்லப்பட்ட இந்தியர் யார்? தண்டனை நிறைவேற்றப்பட்ட 5 பேரின் விபரம் என்ன என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கடந்த 2014 ஆம் ஆண்டில் மட்டும் அந்நாட்டில் 87 பேருக்கு தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications