சீனா: சுற்றுலா தளத்தில் தாறுமாறாக ஓடிய மர்மக் கார் மோதி 5 பேர் பலி: 38 பேர் காயம்
பெய்ஜிங்: சீனாவில் சுற்றுலாத்தளத்தில் தாறுமாறாக ஓடிய மர்ம கார் மோதியதில் 5 பேர் பரிதாமபாகப் பலியானார்கள்.
கடந்த 1989ம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட ஜனநாயக புரட்சியை ராணுவம் அடக்கி ஒடுக்கியது. இந்த புரட்சியின் போது லட்சக்கணக்கான மக்கள் சீன தலைநகர் பீஜிங்கில் போராட்டம் நடத்தினர். பின்னர் அந்த இடம் ‘டியனன்மென் சதுக்கம்' என்ற பெயரில் நினைவுச் சின்னமாகி, சுற்றுலாத் தளமாக கருதபப்டுகிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்த மறைந்த மாவோ ஜெடாங்கின் சமாதியும் அவரது பிரமாண்ட சித்திரமும் வரையப்பட்டுள்ள இந்த இடத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா வாசிகள் வந்து செல்கின்றனர்.
போலீஸ் பாதுகாப்பு அதிகமாக உள்ள இங்கு, நேற்று படுவேகமாக வந்த ஒரு மர்ம கார் ஒன்று சுற்றுலா மக்கள் கூட்டத்தில் பாய்ந்தது. பின்னர், தடுப்பு சுவற்றில் மோதி திடீரென தீப்பிடித்து எரிந்தது கார். இந்த விபத்தில் காரில் வந்த 3 பேரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவரும், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், படுகாயமடைந்த 38 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் எதிர்பாராத விபத்தா அல்லது தீவிரவாதிகளின் சதி வேலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications