For Quick Alerts
For Daily Alerts
Just In
வெள்ளை மாளிகை அருகே நைட் கிளப்பில் மோதல் .... 5 பேருக்குக் கத்திக் குத்து!
வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஹோட்டலில் ஐந்து பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழை அதிகாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவைத் தாண்டி 12. 30 மணியளவில், வாஷிங்டனில் உள்ள பிரபலமான மெக்பாடன் உணவகம் மற்றும் நைட் கிளப்பி்ல இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த ஹோட்டலானது, வெள்ளை மாளிகையிலிருந்து எட்டு கட்டடம் தாண்டி உள்ளது.
ஐந்து பேரும் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்தனற். அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்கள் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
பாருக்குள் வைத்து இந்த மோதல் நடந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் ரத்தக்கறையாக காணப்பட்டது. யார் குத்தியது, எதற்காக மோதல் என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.
இந்த மோதல் குறித்து மெக்பாடன் ஹோட்டலும் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.
Comments
English summary
Five people were stabbed early on Saturday in a restaurant in Washington, D.C., police said. The incident occurred around 12:30 a.m. at McFadden's, a popular restaurant and nightclub on Pennsylvania Avenue, eight blocks from the White House in the nation's capital. All five victims were taken to hospital with knife wounds, a police spokesman said Saturday. Their identities have not been released.