For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா தாக்கி அழித்த தீவிரவாத முகாம் இதுதான்.. உள்ளே என்னவெல்லாம் இருந்தது?- வெளியானது போட்டோ

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியா தாக்கி அழித்த தீவிரவாத முகாம் இதுதான்

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று இந்திய விமானப்படை விமானங்கள் இன்று அதிகாலையில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம்களை குண்டு வீசி அழித்துள்ளன.

    இந்தியா தாக்கி அழித்த தீவிரவாத முகாம்கள், பரப்பளவில், மிகப்பெரிய அளவில் இருந்தன. இவற்றில் 600க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் தங்கியிருக்கும் வசதிகள் இருந்தன. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தள்ளி பாகிஸ்தான் நாட்டில் உள்ள பாலகோட் என்ற பகுதியில் தீவிரவாத பயிற்சி முகாம் இயங்கி வந்தது. 2003-2004 ஆம் ஆண்டில் இந்த பயிற்சி மையத்திற்கான கட்டுமான பணிகள் துவங்கியுள்ளன.

    Flags of USA, UK and Israel painted on staircases in Jaish e Mohammed facility

    ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தளபதிகளும், பயிற்சியாளர்களும் பாகிஸ்தானைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு இங்கு, வைத்து தீவிரவாத பயிற்சி வழங்கியுள்ளனர்.

    இங்குள்ள படிக்கட்டுகளில், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் நாட்டின் தேசிய கொடிகள் வரைந்து வைக்கப்பட்டுள்ளன. இதன் மீது தீவிரவாதிகள் மிதித்தபடியே நடப்பதும் ஒரு பயிற்சியாம். இதன் மூலமாக அந்த நாடுகளுக்கு எதிரான வன்மத்தை, இளைஞர்கள் மனதில் விதைப்பது, தீவிரவாதிகளின் எண்ணம்.

    இந்த தீவிரவாத பயிற்சி மையம், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின், நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதேபோன்று, ஆயுதங்கள் கொட்டி வைக்கப்பட்ட கிடங்கு தொடர்பான புகைப்படமும் வெளியாகியுள்ளது. ஏகே வகை துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிகுண்டுகள், டெட்டனேட்டர்கள் ஆகியவை குவித்து வைக்கப்பயன்படுத்தி, கட்டிடமும் புகைப்படத்தின் மூலம் தெரியவருகிறது. அந்த கட்டிடம், ஆயுதங்களோடு சேர்த்து, தற்போது அடித்து ஒழிக்கப்பட்டுள்ளது.

    இந்த புகைப்படங்கள் எல்லாம், உளவுத்துறையால் ஏற்கனவே திரட்டப்பட்டவையாகும்.

    ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார், மைத்துனரான மவுலானா ஆசாத் அசார் இந்த தீவிரவாத பயிற்சி மையத்தின் தலைவராக செயல்பட்டு உள்ளார். அவரும், தாக்குதலில் கொல்லப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே அறிவித்தார்.

    English summary
    Flags of USA, UK and Israel painted on staircases seen in Jaish e Mohammed facility destroyed by Indian Air Force jets in Balakot.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X