For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானத்தை பைலட்கள் கடத்தவில்லை, பயணிகள் எங்கோ உயிருடன் உள்ளனர்: மாஜி சிப்பந்தி

By Siva
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தை சிப்பந்திகள் கடத்தி இருக்க மாட்டார்கள் என்றும், பயணிகள் உயிருடன் இருக்கக்கூடும் என்று முன்னாள் மலேசிய ஏர்லைன்ஸ் சிப்பந்தி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா சென்ற விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. பின்னர் அது தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாகவும், அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது.

இந்நிலையில் விமானம் கடலுக்குள் விழ விமான சிப்பந்திகள் மற்றும் விமானிகள் காரணமாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Flight MH370 'not hijacked' by cabin crew: Former steward

இது குறித்து மாயமான விமானத்தில் இருந்த சிப்பந்திகளுக்கு பழக்கமான முன்னாள் மலேசிய ஏர்லைன்ஸ் சிப்பந்தி பேட்ரிக் சவ் என்பவர் கூறுகையில்,

மலேசிய விமானம் மாயமானதற்கு சிப்பந்திகள் காரணமாக இருக்க மாட்டார்கள். மேலும் அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் உயிருடன் இருக்கக்கூடும் என்று நான் நம்புகிறேன் என்றார்.

விமானம் மாயமான விவகாரத்தில் மலேசியா எதையோ மறைக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் பேட்ரிக் இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

English summary
Patrick Chow, a former Malaysia Airlines steward, who knew members of the MH370 cabin crew said that the crew could not be responsible for MH 370's disappearance. He believes that the passengers could be alive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X