Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கென்யாவில் வெடித்த போராட்டம்.. பாதுகாப்பாக இருங்கள்! இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

நைரோபி: கென்யாவில் வரி உயர்வை கைவிடக்கோரி மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வரி உயர்வுக்கு எதிராக பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசு ஊழியர்கள் '7 டேஸ் ஆஃப் ரேஜ்' போராட்டங்களை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டங்கள் சில இடங்களில் வன்முறையாக வெடித்திருக்கிறது. குறிப்பாக நேற்று கென்யா நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Kenya Indians

இதில் 5 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். காவல்துறையின் தாக்குதல் சம்பவம் அந்நாட்டு மக்கள் இடையே மேலும் கோபத்தை தூண்டியிருக்கிறது. எனவே போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. அனத்து துறை சார்ந்தவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் கென்யாவில் உச்சப்பட்ச பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் கென்யாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. “கென்யாவில் நிலவும் பதட்டமான சூழலை கருத்தில் கொண்டு அத்தியாவசிய தேவையின்றி இந்தியர்கள் யாரும் வெளிவர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகிறோம். நிலைமை சீராகும் வரை போராட்டங்கள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என தூதரகம் கூறியிருக்கிறது.

அதேபோல, அடுத்தடுத்த அப்டேட் தகவல்களை பெற அங்குள்ள இந்தியர்கள், இந்தியத் தூதரகத்தின் வலைதளம், சமூக வலைதள பதிவுகளை ஃபாலோ செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது. தூதரகத்தின் தரவுகளின்படி சுமார் இருபதாயிரம் இந்தியர்கள் கென்யாவில் சிக்கியுள்ளனர்.

தற்போது அங்கு நடந்து வரும் போராட்டங்கள் மேலும் சில நாட்கள் நீடிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதேபோல இந்த வன்முறை சம்பவங்களுக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்திருக்கிறார். காவல்துறையினர் தொடுத்த அடக்குமுறையில் பத்திரிகையாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் சிலர் காயமடைந்துள்ளனர்.

“ஐநா பொதுச்செயலாளர் வெளிப்படையாக இந்த போராட்டங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வன்முறைகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார்" என்று அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+