'இன்போசிஸ் குட்டை உடைத்தவர்' இழப்பீடு கோரி அமெரிக்க கோர்ட்டில் வழக்கு
அலபாமா: அமெரிக்காவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவர் தன்னை தவறாக பணிநீக்கம் செய்ததற்கு இழப்பீடு வழங்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் அமெரிக்கரான ஜாக் பாமர். அவர் கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது பணியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவர் நியூ ஜெர்சியில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் இன்போசில் நிறுவனத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.

தன்னை தவறாக பணிநீக்கம் செய்ததாகவும், அதற்கான இழப்பீட்டை இன்போசிஸ் தனக்கு வழங்க வேண்டும் எனவும் ஜாக் தனது மனுவில் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் எவ்வளவு இழப்பீட்டுத் தொகையை எதிர்பார்க்கிறார் என்பதை தனது மனுவில் குறிப்பிடவில்லை.
இதே ஜாக் பாமர் தான் இன்போசிஸ் தனது ஊழியர்களை இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க விசா விதிகளை மீறியதாக தெரிவித்தார். இதையடுத்து அமெரிக்கா இன்போசிஸின் விதிமீறல் குறித்து விசாரணை நடத்த துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஜாக் கடந்த 2012ம் ஆண்டிலும் இன்போசிஸ் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றார். ஆனால் அவரது வழக்கு தள்ளுபடியானது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications