சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் இஃப்தார் சமய நல்லிணக்க நிகழ்ச்சி
சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சனிக்கிழமை 10-06-2017 அன்று, சிங்கப்பூர் பென்கூலன் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு மற்றும் சமய இன நல்லிணக்க நிகழ்ச்சியை நடத்தியது.
சிங்கப்பூர் உள்துறை அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுக்கான நாடாளுமன்றச் செயலாளர், திரு. அம்ரின் அமின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். "உலகின் பல நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துவரும் சூழ்நிலையில், நாம் மிகுந்த கவனத்துடன் இருப்பது மட்டுமின்றி, சிங்கப்பூரில் சமூக இன நல்லிணக்க ஒற்றுமையைப் போற்றிப் பாதுகாப்பது பெரிதும் அவசியம். போதைப் பொருள்களுக்கு அடிமையாகி இருப்பவர்களை காப்பாற்றி, அவர்களை நல்வழிப் படுத்துவது நமது கடமை" என்றும் அவர் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு சக்கர நாற்காலிகளை நன்கொடையாக, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் வழங்கியது.

சங்கத்தின் தலைவர் முனைவர் மு. அ. காதர், "கவிக்கோ அப்துல் ரகுமானின் மறைவு, ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு" என்று தனது வரவேற்புரையில் நினைவு கூர்ந்தார். சிங்கப்பூர் புக்கிட் பாத்தோ தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. முரளி பிள்ளை, நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் திரு. இரா தினகரன் மற்றும் பல சமூக அமைப்புகளின் தலைவர்களும், பல இன சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்களும், சங்க உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சங்கத்தின் செயலாளர், கணிதப் பேராசிரியர் திரு. அமானுல்லாஹ் நிகழ்ச்சியை வழிநடத்தினார். ஒற்றுமையையும், சமய இன நல்லிணக்கத்தையும் பறைசாற்றிய வண்ணம், இந்நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications