பெருவில் சுரங்க விபத்து... 4 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு
Recommended Video

லிமா: பெரு நாட்டில் மூன்று நாட்களாக சிக்கி தவித்த நான்கு தொழிலாளர்கள் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சமீபத்தில் பிரேசிலில் அணை உடைந்து ஏற்பட்ட விபத்தில் 120 க்கும் மேற்பட்ட சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாயமாகினர். இந்தநிலையில், பெருவில் சுரங்க விபத்து நிகழ்ந்துள்ளது.
பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகர் ஒயான். இங்கு தனியாருக்கு சொந்தமான பம்பாகுவாய் என்ற மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு பணியாற்றி வருகிறார்கள்.

3 நாட்களாக தவிப்பு
கடந்த 1 ஆம் தேதி திடீரென பெய்த கனமழை காரணமாக சுரங்கத்துக்குள் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பம்பாகுவாய் சுரங்கம்
மூடப்பட்டது. ஆனால், சுரங்கத்தில் 330 அடி ஆழத்தில் நான்கு ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் கடந்த 3 நாட்களாக தண்ணீர், உணவு இன்றி தவித்தனர்.

பத்திரமாக மீட்பு
அவர்கள் சுரங்கத்தில் சிக்கியது தெரிந்த உடனே சுறுசுறுப்பாக செயல்பட்ட மீட்பு படையினர், பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

8 முறை விபத்து
உடனடியாக, மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 3400 மீட்டர்கள் உயரமுடைய இந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏற்கனவே 8 முறை விபத்து நடத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேகாலயாவில் விபத்து
முன்னதாக, இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் கிழக்கு ஜைன்டியாவில் நிலக்கரி சுரங்கதில் கடந்த டிசம்பர் 13ம் தேதி கன மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 15 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். ஆனால் அவர்களில் ஒருவரை கூட மீட்க முடியவில்லை. ஒரே ஒருவரின் உடல் மட்டும் நீரின் மேல் மிதந்து வந்ததால் மீட்க முடிந்தது. 50 நாட்களை கடந்தும் உடல்கள் மீட்கப்படவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications