சீனாவில் காந்தி ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்
பெய்ஜிங்: மகாத்மா காந்தியின் 144வது பிறந்தநாள் சீனாவிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மகாத்மா காந்தியின் 144வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் நம் அண்டை நாடான சீனாவிலும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சாவ் யாங் பூங்காவில் காந்தியின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அதில் காந்திய கொள்கைகள் குறித்த வாசகங்களை சீன குழந்தைகள் ஒப்பித்தனர். இந்திய குழந்தைகள் பஜனை பாடினர். இந்த விழாவில் இந்தியர்கள், சீனர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பெய்ஜிங்கில் உள்ள காந்தி சிலைக்கு சீன அருங்காட்சியக அதிகாரிகள், இந்திய தூதரக அதிகாரி பாலா பாஸ்கர் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.












Click it and Unblock the Notifications