துபாயில் கங்கை அமரன், நடிகர் தாமு கலக்கிய முத்தமிழ்ச் சங்க கலை விழா
துபாய்: துபாய் முத்தமிழ்ச் சங்கத்தின் கலை விழா மார்ச் மாதம் 21ம் தேதி மாலை 6 மணிக்கு துபாய் இந்திய பள்ளி ஷேக் ரஷீத் அரங்கத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு திரு. மோகன் தலைமை ஏற்க திரு. ஷா வரவேற்புரை நிகழ்த்த திருமதி. பாரதி, திருமதி. நூர்ஜஹான், திருமதி. ஷர்மிளா, செல்வி ஷப்னம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி இவ்விழாவை துவக்கி வைத்தனர்.
இவ்விழாவில் சுதா ஃபவுன்டேஷன் நிறுவனர் திரு. ராகவன் உருவாக்கிய புற்று நோய் விழிப்புணர்வு இணையதளத்தை இந்திய தூதரக துணை தூதர் திரு. அசோக் பாபு துவக்கி வைத்துப் பேசுகையில், இந்த இணையதளம் மூலம் உலகில் 15 ஆயிரம் மருத்துவர்களிடம் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

ஞானசம்மந்தன்
விழாவின் சிறப்பு பேச்சாளராக பேராசிரியர் திரு. ஞானசம்மந்தன் கலந்து கொண்டு தனக்கே உரித்தான நகைச்சுவை பேச்சால் அரங்கில் அமர்ந்திருந்த 1600 பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

தாமு
நகைச்சுவை நடிகர் தாமு தனது மிமிக்ரி நிகழ்ச்சியால் சபையினரை தன்வசப்படுத்தினார்.

நடனம்
செல்வி நிவேதிதா குழுவினரின் நடன நிகழ்ச்சி அனைவராலும் பாராட்டும்படி அமைந்திருந்தது.

கங்கை அமரன்
நிகழ்ச்சியின் உச்சக்கட்டமாக "ட்யூன் அன்ட் டோன்" இசை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் திரு. கங்கை அமரன் தொகுத்து வழங்கி தானும் பாடி தான் காலங்களை வென்ற மாபெரும் கலைஞன் என்பதை நிரூபித்துவிட்டார்.

ஏற்பாடு
இவ்விழாவினை திருமதி. லக்ஷ்மிபிரியா, 89.5 ஹலோ எஃப்எம் திரு. ஹாரி மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள். அனுசரணை வழங்கிய அனைவருக்கும் திரு. அனிஸ் ரஹ்மான் நன்றி தெரிவித்தார். கலை விழா ஏற்பாடுகளை திரு. சிகாமணி, திரு. கணேஷ், திரு, ரத்தனவேல், திரு ஷமீம், திரு. ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications