கேப்டன் குடித்த காபியில் உச்சா போக வைக்கும் மருந்தை கலந்த ஜெர்மன்விங்ஸ் துணை விமானி
டுசல்டார்ப்: ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் துணை விமானி லுபிட்ஸ் கேப்டன் பேட்ரிக்கிற்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும் மருந்தை காபியில் கலந்து கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ஸ்பெயினில் இருந்து ஜெர்மனி சென்ற ஜெர்மன்விங்ஸ் விமானத்தை அதன் துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28) வேண்டும் என்றே பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலை மீது மோதி விபத்துக்குள்ளாக்கினார். இதில் லுபிட்ஸ், கேப்டன் பேட்ரிக் உள்பட 150 பேர் பலியாகினர்.

இந்த சம்பவத்தை அடுத்து லுபிட்ஸின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கம்ப்யூட்டர், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர் எவ்வாறு தற்கொலை செய்வது என்றும், விமானி அறை கதவின் பாதுகாப்பு சிஸ்டம் பற்றியும் சம்பவம் நடப்பதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு இணையதளத்தில் ஆய்வு செய்தது தெரிய வந்தது.
இந்நிலையில் அவர் இணையதளத்தில் வேறு ஒன்று பற்றி தேடியதும் தெரிய வந்துள்ளது. அதாவது அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செய்ய உதவும் மருந்து பற்றி தான் லுபிட்ஸ் ஆய்வு செய்துள்ளார்.
லுபிட்ஸ் கேப்டன் குடித்த காபியில் சிறுநீர் கழிக்கத் தூண்டும் மருந்தை கலந்து கொடுத்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அந்த காபியை குடித்த பிறகு பேட்ரிக் கழிப்பறைக்கு சென்றுள்ளார். அவர் விமானி அறையை விட்டு வெளியே சென்றதும் கதவை பூட்டிக் கொண்ட லுபிட்ஸ் விமானத்தை விபத்துக்குள்ளாக்கியுள்ளார்.
மன அழுத்தம், கண் பார்வை கோளாறு, வெளியே சொல்லாத நோய் ஆகியவற்றால் அவதிப்பட்ட லுபிட்ஸ் தற்கொலை செய்ய விமானத்தை மலை மீது மோதியுள்ளார் என்று நம்பப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications