ஓசோன் மண்டலத்தையே அழிக்கக்கூடிய ராட்சத விண்கல்... 31ம் தேதி பூமியைக் கடக்கிறது!
வாஷிங்டன்: பூமியைத் தாக்கி ஓசோன் மண்டலத்தை அழிக்கும் என அஞ்சப்பட்ட ராட்சத விண்கல் இம்மாதம் 31ம் தேதி, பூமியை சேதப்படுத்தாமல் கடந்து செல்லும் என நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
விண்வெளியில் பல விண்கற்கள் மிதந்தபடி உள்ளன. அவற்றில் பூமியை நோக்கி வரும் சில விண்கற்கள் புவியை அடைவதற்கு முன்னதாகவே சாம்பல் ஆகிவிடுகின்றன. மேலும் சில பல துண்டுகளாக உடைந்து விழுந்து, பூமிக்கு சேதத்தை ஏற்படுத்துகின்றன.
அந்தவகையில், பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்றை கடந்த 10ம் தேதி விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அந்த விண்கல்லிற்கு 2015 TB145 எனப் பெயரிடப்பட்டது.

ஓசோன் மண்டலம் அழியும்...
280 முதல் 620 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல்லானது பூமியின் மீது மோதினால், ஓசோன் மண்டலம் முற்றிலுமாக அழியும் அபாயம் கொண்டது. இதனால், பூமியின் பருவ நிலைகளில் பல பருவநிலை மாறுதல்கள் உருவாகும் என அஞ்சப்பட்டது.

நம்பிக்கை...
ஆனால், தற்போது அந்த விண்கல்லானது பூமியைத் தாக்காமல் கடந்து செல்லும் என நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

வரும் 31ம் தேதி...
மணிக்கு 125,529 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து வரும் இந்த விண்கல், இம்மாதம் 31ம் தேதி 4,99,000 கிலோமீட்டர் தூரத்தில் பூமியைக் கடக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராட்சத விண்கல்...
2006ம் ஆண்டுக்குப் பிறகு பூமிக்கு மிக நெருக்கமாக வந்து செல்லும் விண்கல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications