7 லட்சம் அப்ளிகேஷன்களை அதிரடியாக முடக்கிய பிளே ஸ்டோர்.. அதிர வைக்கும் காரணம்!
கூகுளின் பிளே ஸ்டோர் கடந்த வருடம் மட்டும் 7 லட்சம் அப்ளிகேஷன்களை அதிரடியாக முடக்கி இருக்கிறது.
நியூயார்க்: தற்போது ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் அனைவரும் கூகுள் பிளே ஸ்டோர் மூலமாகவே அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்து வருகிறார்கள். இதில் கிடைக்கும் அப்ளிகேஷன்களில் 90 சதவிகிதம் இலவசமாக கிடைக்கிறது.
இது பயன்படுத்த எளிதாக இருப்பதால் உலகம் முழுக்க பலரும் இதை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். கூகுளுக்கு இதன் காரணமாக மிகவும் அதிகபட்ச வருமானம் கிடைக்கிறது.
தற்போது கூகுளின் பிளே ஸ்டோரில் இருந்து 7 லட்சம் அப்ளிகேஷன்கள் நீக்கப்பட்டு இருக்கிறது.

எடுத்தது
இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுக்க இருக்கும் அனைத்து பகுதிகளில் இருந்தும் இந்த அனைத்து ஆப்களும் நீக்கப்பட்டு இருக்கிறது. இதை டவுன் லோட் செய்வதற்கு முன்பே கூகுள் நீக்கி உள்ளது. டவுன் லோட் செய்யப்பட ஆப்களை செயல் இழக்க வைத்துள்ளது.

எப்படி நீக்கினார்கள்
இதற்காக புதிய தொழில்நுட்பம் ஒன்றை பயன்படுத்துகிறார்கள். கூகுளில் விதிமுறைகளை பின்பற்றாத ஆப்களை இது உடனடியாக கண்டுபிடிக்கும். அதன்முலம் அதை எளிதாக நீக்கிவிடும். 2017ல் இந்த புதிய தொழில்நுட்பம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

காரணம் என்ன
இதில் பல ஆப்கள் பிரபலமான ஆப்களின் போலி ஆகும். மேலும் சில மொபைலை பாதிக்க கூடிய வகையில் இருந்துள்ளது. இன்னும் சில ஆப்கள் பயனாளர்களின் தகவல்களை திருடும் வகையில் இருந்துள்ளது.

மென்பொறியாளர்கள்
அதேபோல் 1 லட்சம் ஆப் டெவலப்பர்கள் இதன் மூலம் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் இமெயில் மூலம் ஏற்றப்படும் எந்த ஆப்களும் இனி கூகுளில் இடம்பெற முடியாது. அவர்கள் வேறு இமெயில் மூலம் வருவதை தடுக்கவும் வழிகள் யோசிக்கப்ட்டு வருவதாக கூறப்பட்டு இருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications