தடை செய்யப்பட்ட கெமிக்கல் குண்டுகள்.. சோதனை எலியான சொந்த மக்கள்.. சிரியா போர் கொடூரம்

சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 8 நாட்களில் மட்டும் இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சாலையில் உண்மையாக ஓடும் ரத்த வெள்ளம்...வீடியோ

    டமாஸ்கஸ்: சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 8 நாட்களில் மட்டும் இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். அங்கு மோசமான கெமிக்கல் குண்டுகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

    சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

    இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. இதில் பல குழந்தைகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

    குண்டுகள்

    இந்த குண்டுகள் பொதுவாக குளோரின் மூலக்கூறுகள் மூலம் செய்யப்படுகிறது. இது கீழே தரையில் குறிப்பிட்ட வேகத்தில் பட்டவுடன் குளோரின் புகையை வெளியிடும். அதே சமயம் மோசமான சத்தத்துடன் நெருப்பும் உருவாகும்.

    ஐநா தடை

    இந்த குண்டுகள் பல முன்னேறிய நாடுகளில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. ஜநாவும் தடை செய்துள்ளது. ஈராக் போரிலும், இலங்கை போரிலும் இந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வந்து இருக்கிறது. தற்போது சிரியா அரசும், ரஷ்யா அரசும் இந்த குண்டுகளை பயன்படுத்தி வருகிறது என்று கூறப்பட்டு இருக்கிறது.

    என்ன நடக்கும்

    இந்த குண்டுகளை பயன்படுத்தினால் மோசமாக மூச்சு அடைப்பு ஏற்படும். சரியாக சுவாசிக்க முடியாது. கண்கள் எரிய தொடங்கும். ஆனாலும் கொஞ்ச நேரத்தில் மரணம் ஏற்படும். இதில் இருந்து தப்பிப்பது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது.

    குழந்தைகள்

    இதில் இருந்து தப்பிக்க உடலில் அதிக வேகத்தில் நீர் பாய்ச்சி அடிப்பார்கள். ஒரு இடம் விடாமல் உடலில் வேகமாக நீர் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது மட்டும்தான் காப்பாற்ற முடியும். ஆனால் குழந்தைகள் இந்த காற்று பட்டவுடன் பெரும்பாலும் இறந்துவிடுவார்கள். இது குழந்தைகளை குறிவைத்து ஏவப்படுகிறது.

    மாட்டிக் கொண்டனர்

    இந்த குண்டுகள் சிரியா போரில் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிகுறியுடன் பலர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை இந்த அறிகுறி கொண்டு 9 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இன்னும் அங்கு நிறைய பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    வீடியோ வெளியானது

    இந்த குண்டு காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களின் ஆடைகள் களையப்பட்டு தண்ணீர் ஊற்றப்படுகிறது. அவர்கள் வலியில் கத்தும் நிகழ்வு வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

    மரணம் அடைந்தனர்

    இந்த கெமிக்கல் குண்டுகள் காரணமாக பல குழந்தைகள் மரணம் அடைந்து இருக்கிறார்கள். கெமிக்கல் குண்டு காரணமாக இறந்த குழந்தையின் புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    மிகவும் மோசம்

    அதேபோல் மூச்சு அடைப்பு காரணமாக பல குழந்தைகள் உயிருக்கு போராடி வருகிறார்கள். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டு இருக்கிறது.

    போராளிகளும்

    தற்போது போராளிகளும் இந்த குண்டுகளை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அரசு படைகளை சமாளிக்க முடியாமல் போராளிகள் இந்த குண்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் இன்னும் கொடிய கேஸ்கள் அவர்களிடம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+