10 வயது சிறுமிக்கு 50 வயதான மாப்பிள்ளை... குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய பாக். போலீஸார்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பத்து வயது சிறுமிக்கு 50 வயதான முதியவருடன் நடைபெற இருந்த திருமணத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
பாகிஸ்தானின் ஜகோபாபாத் அருகே உள்ள தாள் பகுதியில் கடந்த சனிக்கிழமை ஒரு குழந்தைத் திருமணம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, 50 வயது முதியவர் ஒருவர் 10 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ள முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 50 வயது முதியவரை போலீஸார் கைது செய்தனர்.அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், இந்த திருமணத்திற்காக குழந்தையின் தந்தை ரூ.4 லட்ச ரூபாய் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

பொதுவாக, இது போன்ற செயலில் ஈடுபடும் பெற்றோர்கள் ஏழ்மை நிறைந்தவர்கள். இதன் மூலம் தனது குழந்தைக்கு வசதியான வாழ்க்கை கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர் என கூறப்படுகிறது. முக்கியமான விஷயம் என்னவென்றால், இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குழந்தையின் பெற்றோர்களுக்கு அந்நாட்டில் வழங்கப்படும் தண்டனையானது ரூ.1000 அபராதமும், ஒரு மாத சிறை தண்டனையுமே என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் பெண்களுக்கு 15 வயதுக்கு முன்னதாகவே திருமணம் செய்து வைக்கும் சம்பவம் 3 சதவீதம் நடைபெறுகிறது. 21 சதவீத பெண்களுக்கு 18 வயது பூர்த்தியடைவதற்குள் திருமணம் செய்து வைக்கப்படுகிறது என யுனிசெப் அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications