குவாடெமாலா விபத்தில் 51 பேர் பலி! சாலை தடுப்பை உடைத்துக்கொண்டு பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து!
குவாடெமாலா: மத்திய அமெரிக்க நாடான குவாடெமாலாவில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பாலத்திலிருந்து சாலையோர தடுப்பை உடைத்துக்கொண்டு கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியாகி உள்ளனர். இந்தக் கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமெரிக்காவை சேர்ந்த நாடு குவாடெமாலா. இந்நிலையில் திங்கட்கிழமை அன்று சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்தில் இருந்து குவாடெமாலா சிட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து எல் ப்ரோக்ரெசோ பகுதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஆற்றின் மேலே கட்டப்பட்டிருந்த பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து, சுமார் 65 அடி தூரத்துக்கு உருண்டு உருக்குலைந்து போனது. பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த பிற வாகனங்கள் மீது மோதி, சாலைத் தடுப்பை உடைத்துக்கொண்டு பாலத்திலிருந்து கீழே விழுந்ததாக தெரியவந்துள்ளது.
இந்தக் கோர விபத்தில் பேருந்தில் இருந்த 70 பேரில் 51 பயணிகள் பலியாகினர். மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் குழுவின் செய்தித் தொடர்பாளர் விக்டர் கோம்ஸ், தற்காலிக பிணவறையில் 51 உடல்கள் இருப்பதை உறுதிப்படுத்தினார். உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
குவாடெமாலா அதிபர் பெர்னார்டோ அரேவலோ இந்த துயரச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ":இன்று குவாடெமாலாவுக்கு ஒரு கடினமான நாள்" என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து பற்றி அந்நாட்டு அமைச்சர் மிகுவல் ஏஞ்சல் டயஸ், "பேருந்து 30 ஆண்டுகள் பழையது என்றாலும், அதற்கு இன்னும் இயக்க உரிமம் இருப்பது ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. பேருந்தில் அதிக பயணிகள் ஏற்றப்பட்டிருந்ததுதான் காரணமாக என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஜனவரி மாதம், பெரு தலைநகர் லிமாவின் அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில் 52 பேர் உயிரிழந்தனர். பிரேசிலில், தெற்கு மாநிலமான சாண்டா கேடரினாவில் மார்ச் 2015 இல் சுற்றுலாப் பேருந்து விபத்தில் 54 பேர் இறந்தனர். அதன் பிறகு நடந்த மிகப்பெரிய விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications