அக்டோபர் 4ம் தேதி வளைகுடா நாடுகளில் பக்ரித் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சவுதி: வளைகுடா நாடுகளில் வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி பக்ரித் எனப்படும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
25.09.2014 வியாழக்கிழமை துல் ஹஜ் பிறை 1 என சவுதி அரேபிய அரசு உறுதிப்படுத்தியுள்ளதாக அல் அரேபியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் அப்படையில் சவுதி, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வரும் அக்டோபர் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை அரஃபா தினம் மற்றும் மறுநாள் அக்டோபர் 4ஆம் தேதி சனிக்கிழமை ஈதுல் அழ்ஹா என்னும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரஃபா நாள் வெள்ளிக்கிழமை வருவதால் இந்த ஆண்டு "ஹஜ்ஜுல் அக்பர்" எனவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
தியாகத் திருநாள் என்றும் அழைக்கப்படும் பக்ரித் தினத்தன்று முஸ்லிம்கள் குர்பானி கொடுப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications