நியூயார்க் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு?.. பயணிகள் வெளியேற்றப்பட்டனர்!
நியூயார்க்: நியூயார்க் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து ஜான் எப் கென்னடி விமான நிலையத்திலிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
விமான நிலையத்தின் 8வது முனையப் பகுதியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன. விமானங்கள் புறப்படும் பகுதியிலிருந்து சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 9. 30 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
#BREAKING: #NYPD: Terminal 8 at
— AlwaysActions (@AlwaysActions) August 15, 2016
JFK Airport evacuated in response
to reports of gunfire.
📸@AmichaiStein1📸 pic.twitter.com/p99cSjOpBq
நியூயார்க் போலீஸார் அங்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் யாரும் காயமடைந்ததாக தகவல் இல்லை. யாரேனும் கைது செய்யப்பட்டனரா என்ற விவரமும் வெளியாகவில்லை.
துப்பாக்கிச் சண்ட எதுவும் நடந்ததாக தெரியவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
இருப்பினும் துப்பாக்கிச் சண்டை எதுவும் அங்கு நடக்கவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.