வங்கதேச ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு: போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேர் பலி
டாக்கா: வங்கதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் பலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் சிலர் வெளிநாட்டவராக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் குல்ஷன் என்ற புறநகர் பகுதியில் ஆர்ட்டிசன் பேக்கரி கபே என்ற ஹோட்டலுக்குள் புகுந்த தீவிரவாதிகள் இரவு 9 மணியளவில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேர் பலியாகினர்.

மேலும் பொதுமக்கள் சிலரை பிணை கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்த பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர். தற்போது அந்த பகுதி பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இரு தரப்பிலும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தப் பகுதியில் பல்வேறு நாடுகளில் தூரகங்கள் உள்ளதால் அங்கும் பதட்டமும் பரபரப்பும் காணப்படுகிறது. இருப்பினும் தாக்குதல் நடத்தியவர்கள் பற்றிய உறுதியான தகவல்கள் தெரியவில்லை. இது ஐஎஸ் தீவிரவாதிகள் அமைப்பின் சதிச்செயலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களாக வங்கதேசத்தில் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலும் அந்த அமைப்பினரின் சதித் திட்டமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்திய தூதரக அதிகாரிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications