ரயில்வேயில் 100% அன்னிய முதலீட்டுக்கு அனுமதி ஏன்?: மோடி விளக்கம்
நமது இந்தியா இன்னமும் பின் தங்கியிருப்பதற்கான எந்த ஒரு காரணமும் இல்லை. இந்தியா நிச்சயம் வலிமையான நாடாக வரும். இந்தியாவில் தேர்தல் நடைபெற்ற போது உங்களால் வாக்களிக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால் தேர்தல் முடிவுகளை ஒவ்வொரு நிமிடமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நீங்கள்.
இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்காகத்தான் ஜன் தன் யோஜனா திட்டத்தைத் தொடங்கினோம். இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 1 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்படுகின்றன. ஆனால் கடந்த 10 வாரங்களில் 7 கோடி வங்கிக் கணக்குகளை தொடங்கி இருக்கிறோம்.

இந்தியக் குடிமக்களாகிய நாம் நினைத்தால் 'தூய்மை' நாடாக உருவாக்க முடியும். ஏழை மக்கள் தூய்மையின்மையால் நோயால் அவதிப்படுகின்றனர். இதற்காகவே தூய்மை இந்தியா திட்டத்தைத் தொடங்கினோம். நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம்.
நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்த மகாத்மா காந்தியின் 150வது பிறந்த ஆண்டு 2019. அப்போது நாம் தூய்மையான இந்தியாவை காந்திக்கு அர்ப்பணிப்போம்.
இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவே மேக் இன் இந்தியா திட்டத்தைத் தொடங்கினோம். உலக நாடுகளின் ஒட்டுமொத்த முதலீடும் இந்தியாவுக்கு வர வேண்டும்.
இந்தியாவில் ரயில் கூரைகள் மீது ஏறி பயணம் செய்வதை பார்க்க முடியும். இந்த நிலையை மாற்றவே ரயில்வே துறையில் 100% அன்னிய முதலீட்டை அனுமதித்துள்ளோம். 3 ரயில்வே பல்கலைக் கழகங்களையும் தொடங்கியுள்ளோம்.
இந்தியா இளைஞர்கள் எனும் உழைப்பு சக்தியால் ஆசீர்வதீக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் உழைப்பு சக்தி தேவையாக இருக்கிறது. அதற்கேற்ற வகையில் நமது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இப்போதைய தேவை ஒரு நல்ல நிர்வாகம்தான்.. அரசுகள் தேவை என்பதை விட நிர்வாகமே தேவை. முந்தைய அரசுகள் சட்டங்களை உருவாக்கி மகிழ்ந்தன. ஆனால் நான் சட்டங்களை கட்டுப்பாடுகளை நீக்கி மகிழ்ச்சியடைகிறேன். மக்கள் அமைதியாக சுதந்திரமாக வாழ தூய்மையான காற்று அவசியம் என்பதற்காகத்தான் இதனை செய்கிறோம்.
நீங்கள் இந்தியாவைப் பற்றி என்ன கனவு காண்கிறோர்களோ அதையே நானும் என்னுடைய கனவாகக் கொள்கிறேன்.
ஒரு நாட்டை அரசு உருவாக்கிவிடாது. மக்கள்தான் நாட்டை அரசை உருவாக்குகிறார்கள். இந்திய வம்சாவளி என்பதற்கான அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் (பி.ஐ.ஓ) வாழ்நாள் கால விசா பெற முடியும்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 2015 ஆம் ஆண்டு முதல் இந்திய கலாசார மையம் செயல்படத் தொடங்கும். ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்தியாவில் இறங்கி 'விசா' பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளோம்.
mygov.in என்ற இணையதளம் மூலம் உங்களது குறைகளை ஆலோசனைகளைத் எனக்குத் தெரிவியுங்கள்.
இவ்வறு பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications