தீயா வேலை செய்யும் சூரியன்.. பாகிஸ்தானில் 4 நாட்களில் 15 பேர் பலி!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மட்டும் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 15 பேர் பலியாகியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சுட்டெரிக்கும் வெயிலுக்கு நான்கு நாளில் 15 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள லால் ஷாபாஸ் கலாந்தர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திருவிழா ஒன்றில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பாகிஸ்தானில் தற்போது வெயில் அதிகமாக இருப்பதால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பலரும் வெயிலின் தாக்குதலுக்கு ஆளாகினர்.

heatstroke leaves 15 dead in pakistan

இதில் நான்கு நாளில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகளை அதிகாரிகள் சரிவர செய்யாததே என்ற கு ற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக அம்மாகாண அதிகாரிகளுக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

கடந்த 2017ம் ஆண்டு இதே தர்கா பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் 90 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 300 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+