டெக்சாஸ், ஓக்லஹாமாவை புரட்டிப்போட்ட புயல்.... பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு!
டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் ஓக்லஹாமா மாகாணங்களில் தொடர்ந்து வீசி வரும் புயல், மற்றும் மழை, வெள்ளத்திற்கு 28 பேர் பலியாகினர்.
அங்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வீசும் புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 28 பேர் வரை உயிரிழந்தனர். வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஏராளமான கார்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதோடு, சாலைகள் மூடப்பட்டுள்ளதால், டெக்சாஸ், ஹூஸ்டன் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications