Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடிப்போன இஸ்ரேல்.. ராணுவ தலைமையகம் மீது ஹிஸ்புல்லா சரமாரி தாக்குதல்!

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான போர் தற்போது லெபனானுக்கும் விரிவடைந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் ராணுவ தலைமையகத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதலை தொடுத்திருக்கிறது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

ஹமாஸை அழிப்பதாக கூறி, கடந்த ஓராண்டாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 40,000க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்தனர். ஓராண்டுக்கு பிறகு ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் போர் பாலஸ்தீனத்தை தொடர்ந்து, லெபனானுக்கும் விரிவடைந்துள்ளது. லெபனான் மீது கையை வைத்தவுடன், ஹிஸ்புல்லா களத்தில் குதித்திருக்கிறது. இஸ்ரேல் ராணுவத்தை குறி வைத்து ஹிஸ்புல்லா அமைப்பு தொடர்ந்து தாக்குதலை தொடுத்து வருகிறது.

israel hezbollah

நேற்றிரவு இந்த தாக்குதல் தீவிரமடைந்திருக்கிறது. அதாவது, இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள அந்நாட்டு ராணுவ தலைமையகத்தின் மீது ஹிஸ்புல்லா சரமாரியாக ஏவுகணைகளை வீசியிருக்கிறது. இந்த தாக்குதலுக்கு டிஜிபி ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா பயன்படுத்தியிருக்கிறது. தாக்குதலில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. எனினும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர்.

பின்னணி என்ன?: பாலஸ்தீனத்தில் தொடக்கத்தில் முழுக்க முழுக்க இஸ்லாமியர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், ஜெர்மனியின் ஆதிக்கத்திலிருந்து தப்பிக்க அங்கிருந்து வெளியேறிய யூதர்களுக்கு, அமெரிக்காவும், பிரிட்டனும் சேர்ந்து பாலஸ்தீனத்தில் அடைக்கலம் கொடுத்தது. இதுதான் இப்போது நடக்கும் போருக்கு தொடக்க புள்ளி. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி உடைத்து இஸ்ரேல் என உருவாக்கப்பட்டது.

நாடுதான் கிடைத்துவிட்டதே அத்துடன் அமைதியாக இருக்கலாம் என்று நினைக்காத இஸ்ரேல், தனது எல்லையை விரிவுபடுத்த தொடங்கியது. இதற்கு அமெரிக்காவும் ஆதரவாக இருந்தது. இப்போது பாலஸ்தீனம் முழுவதையும் இஸ்ரேல்தான் ஆக்கிரமித்திருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக கொடி பிடிப்பவர்கள் கொல்லப்பட்டார்கள். இது எல்லாம் சேர்ந்து பாலஸ்தீன விடுதலை அமைப்பு என்கிற ஆயுதம் தாங்கிய குழுக்களை உருவாக்கியது.

இந்த குழு, இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இக்குழு திடீரென எதிர்பாராத விதமாக இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது. இந்த ஏரியாவுல நான்தான் ராஜா.. என் மேலேயே கை வச்சுட்டியா? என இஸ்ரேல் பதிலுக்கு போரை அறிவிக்க, ஓராண்டில் காசா எனும் பாலஸ்தீன நகரத்தை இஸ்ரேல் உரு தெரியமால் அழித்துவிட்டது. ஹமாஸுக்கு ஆதரவாக ஈரான் உருவாக்கிய ஹிஸ்புல்லா அமைப்பு உள்ளே நுழைய, தற்போது ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராகவும் இஸ்ரேல் போரை நடத்தி வருகிறது.

ஆக.. இந்த போர் முடிய வேண்டும் எனில், இஸ்ரேலின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+