அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு 'அதில்' ஆர்வம் குறைவாம்
லண்டன்: ஆண்டுக்கு ரூ. 50 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்குவோர் உறவு வைத்துக் கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள் என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த லவ்ஹனி என்ற செக்ஸ் பொம்மைகள் விற்கும் நிறுவனம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அதாவது எவ்வளவு சம்பாதிப்பவர்கள் செக்ஸ் உறவில் கெட்டிக்காரர்களாக உள்ளனர் என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1, 600 பேர் கலந்து கொண்ட இந்த கணக்கெடுப்பின் முடிவுகளை பார்ப்போம்.
வாரம் ஒரு முறை
ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பளம் வாங்குபவர்களில் பலர் வாரம் ஒரு முறை தான் உறவு வைத்துக் கொள்கிறார்களாம்.
பலமுறை
ரூ.15 முதல் 35 லட்சம் வருடாந்திர சம்பளம் உள்ளவர்கள் ஒரு வாரத்தில் பல முறை உறவு வைத்துக் கொள்கிறார்களாம்.
பலருடன்
அதிகமாக சம்பாதிப்பவர்கள் புதிது புதிதாக முயற்சி செய்ய நினைப்பவர்கள். அவர்களில் பலர் பல பெண்களுடன் உறவு வைக்க விரும்புகிறார்கள்.
3 பேர்
அதிகமாக சம்பாதிப்பவர்களில் 45 சதவீதம் பேர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் உறவு கொண்டுள்ளனர். அதே சமயம் ரூ. 15 முதல் 35 லட்சம் வரை ஊதியம் பெறுபவர்களில் 19 சதவீதம் பேர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் உறவை வைத்துள்ளனர்.