எத்தியோப்பியாவிலிருந்து கடத்தப்பட்ட விமானம் ஜெனிவாவில் தரை இறக்கப்பட்டது- கடத்தல்காரன் கைது
Subscribe to Oneindia Tamil
ஜெனிவா: ரோம் நகருக்கு 200 பயணிகளுடன் சென்ற எத்தியோப்பியா விமானம் கடத்தப்பட்டு ஜெனிவாவில் தரை இறக்கப்பட்டது.
எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து 'ET702' என்ற விமானம் நள்ளிரவு 00.30 மணிக்கு புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அந்த விமானம் திடீரென கடத்தப்பட்டது.
பின்னர் ஜெனிவாவில் அந்த விமானம் கட்டாய தரை இறக்கம் செய்யப்பட்டது. உடனடியாக அந்த விமான நிலையம் மூடப்பட்டு காவல்துறையினர் விமானத்தை சுற்றி வளைத்தனர்.
அப்போது கடத்தல்காரர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டான். விமானத்தில் பயணம் செய்த பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக இருக்கின்றனர். எதற்காக இந்த விமானம் கடத்தப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications