வங்கதேசத்தில் கோயில் பூசாரி கழுத்தறுத்து கொலை.. அச்சத்தில் உறைந்துள்ள சிறுபான்மையினர்!
டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான கொலை சம்பவங்கள் தொடர்கின்றன. இதற்கு சமீபத்தில் பலியாகியுள்ளது இந்திய வம்சாவளியை சேர்ந்த கோயில் பூசாரி அனந்த கோபால் கங்குலி என்ற 70 வயது முதியவராகும். இவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஜெனைடா என்ற பகுதியில் நேற்று காலை இந்த கொலை நடந்துள்ளது. முதலில் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள், பிறகு கங்குலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

சைக்கிள் ஓட்டியபடி, நல்டங்கா பஜார் பகுதியிலுள்ள கோயிலுக்கு பூஜை செய்ய கங்குலி சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 பேர் அவரை தாக்கி கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கிறார்கள்.
இந்த கொலைக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம், ஜெனைடா பகுதியை சேர்ந்த சமிர் அலி என்பவர் கொலை செய்யப்பட்டார். அவர் முஸ்லிமாக இருந்து கிறிஸ்தவராக மதம் மாறிய நிலையில் இந்த கொலை நடந்திருந்தது.
கடந்த 2 தினங்களில் வங்கதேசத்தின், மத பெரும்பான்மையினரால் கொலை செய்யப்பட்ட 2வது நபர் கங்குலியாகும். நடோர் பகுதியில் ஒரு கிறிஸ்தவர் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், இந்துவான, கங்குலியும் கொல்லப்பட்டுள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்கம் வங்கதேசத்தில் வலுவாகி வருவதற்கான அறிகுறிகளாகவும், இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. பிற மதத்தவர் மட்டுமின்றி, நடுநிலையாளர்களும் கடந்த சில நாட்களாக தாக்குதலுக்கு உள்ளாகி வருவது வங்கதேசம் மற்றொரு ஆப்கனாக மாறிவருவதற்கான எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications