வானத்துக்கு மேல யாருப்பா தம் அடிச்சு "ரிங்" விட்டது....??
சார்டாண்டி, கஜகஸ்தான்: கஜகஸ்தானில் வானில் தென்பட்ட பெரிய கருப்பு வளையம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவ காட்சி யூடியூபில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.
மர்மான முறையில் இந்த கருப்பு வளையம் வானில் தென்பட்டது. சார்டாண்டி என்ற கிராமத்துக்கு மேலே வானில் தெரிந்த இந்த கருப்பு வளையத்தை கிராமத்து மக்கள் பீதி கலந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

கிட்டத்தட்ட கால் மணி நேரத்திற்கும் மேலாக இது அசையாமல் அப்படியே காணப்பட்டது. இது வேற்று கிரக வாசிகளின் கைவரிசையா என்று பலரும் குழம்பிய நிலையில் அருகாமையில் உள்ள பேக்டரியிலிருந்த வெளியான புகையால் இந்த வளையம் ஏற்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பூமியிலிருந்து 100 மீட்டர் உயரத்தில் இந்த கருப்பு வளையம் தென்பட்டது. கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவிலிருந்து 40 மைல் தொலைவில் இந்த கிராமம் உள்ளது. கால் மணி நேரம் தென்பட்ட இந்த வளையம் பின்னர் மறைந்து விட்டது.
இந்த வீடியோவை இதுவரை 50,000க்கும் மேற்பட்ட முறை பார்த்துள்ளனர். இதுகுறித்து சார்டாண்டி கிராமவாசியான ஓலேக் மென்ஷிகோவ் கூறுகையில் பெரிய கருப்பு வளையமாக அது இருந்தது. மாலை 4 மணியளவில் இந்த கருப்பு வளையம் தென்பட்டது. பின்னர் அது காணாமல் போய் விட்டது என்றார்.












Click it and Unblock the Notifications