செக்ஸ் அடிமைகளின் சந்தை.. அதிர வைக்கும் ஐஎஸ் .. இளம் பெண்ணின் கண்ணீர்க் கதை
பெய்ரூட்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தும் செக்ஸ் அடிமை மார்க்கெட் பற்றி தப்பி வந்த 18 வயது யசிதி இன பெண் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் யசிதி இன பெண்களை கடத்தி அவர்களை செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர். மேலும் அவர்களை செக்ஸ் அடிமை சந்தைகளிலும் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தீவிரவாதிகளிடம் இருந்து 18 வயது யசிதி இன பெண் ஜினான் தப்பி வந்துள்ளார். அவர் தீவிரவாதிகள் பற்றி கூறுகையில்,

பெண்கள்
தீவிரவாதிகள் தாங்கள் கடத்தி வரும் பெண்களை எல்லாம் ஒரு பெரிய ஹாலில் நிற்க வைப்பார்கள். தீவிரவாதிகள் அந்த பெண்களை கிண்டல் செய்து சிரிப்பதுடன் அவர்களின் பின்னால் கிள்ளுவார்கள்.

சந்தை
செக்ஸ் அடிமை சந்தையில் பெண்களை வாங்க ஈராக், சிரியா மற்றும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் வருகின்றனர். அழகான பெண்களை முதலாளிகளுக்கும், வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பணக்காரர்களுக்கும் என்று ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள்.

கிண்டல்
செக்ஸ் அடிமை சந்தைக்கு வரும் ஆண்கள் அங்கு இருக்கும் பெண்களை பற்றி கேவலமாக பேசுவார்கள், சிரிப்பார்கள். இந்த பெண்ணுக்கு மார்பு பெரிதாக உள்ளது என்று கூட கூறுவார்கள்.

யசிதி
செக்ஸ் அடிமை சந்தைக்கு வருபவர்கள் எனக்கு நீல நிற கண்கள் உடைய யசிதி இன பெண் தான் வேண்டும் என்பார்கள். அத்தகைய பெண்ணுக்கு எவ்வளவு தொகை வேண்டும் என்றாலும் தருகிறோம் என்கிறார்கள். சிரியா, துருக்கி அல்லது வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்களை தவிர பிற நாட்டவர் யாரும் 3 பெண்களுக்கு மேல் வாங்க முடியாது என்றார் ஜினான்.












Click it and Unblock the Notifications