திருநம்பிக்கும் திருநங்கைக்கும் இயற்கையான முறையில் பிறந்த குழந்தை.. இது எப்படி சாத்தியம்?
கொலம்பியா: கொலம்பியாவில் திருநங்கைக்கும் திருநம்பிக்கும் குழந்தை பிறந்துள்ள நிலையில் இது எப்படி சாத்தியம் என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.
டான்னா சுல்தானா ஒரு கொலம்பியா மாடல் ஆவார். தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அவர் ஆணாக பிறந்தார். ஆனால் இப்போது அவர் ஒரு பெண்ணாக மாறியுள்ளார். அவர் ஒரு திருநங்கை.
அவரது கணவர் எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறி வாழ்ந்து வருகிறார். அவர் ஒரு திருநம்பி ஆவார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொண்டனர்.

இயற்கையான முறை
மேலும் இயற்கையான முறையில் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள முடிவெடுத்தனர். அவரது கணவர் எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியிருந்தாலும் அவரது உடலில் கர்ப்பம் ஆவதற்கான பெண்ணுறுப்புகளை அவர் அறுவை சிகிச்சை செய்து மாற்றிக் கொள்ளவே இல்லை என்கிறார்கள்.

கர்ப்பம்
இதையடுத்துதான் அவர் கர்ப்பமானார். தனது கணவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை மனைவி சுல்தானா இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். பொதுவாக மனைவி கர்ப்பிணியாக இருக்கும் போது வயிறு பெரிதாக இருந்தால் கணவன்மார்கள், அந்த வயிற்றில் குழந்தைக்கு முத்தமிடுவார்கள்.

முத்தமிட்ட காட்சிகள்
அது போல் இங்கு சுல்தானா அவரது கணவரின் வயிற்றில் முத்தமிட்ட காட்சிகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் சுல்தானாவின் கணவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. அது போல் மருத்துவர்களும் இது எப்படி சாத்தியமானது என குழப்பத்தில் உள்ளனர்.

இயற்கையான பிறப்புறுப்புகள்
எனினும் சுல்தானா மற்றும் எஸ்டெபன் இருவருக்கும் இயற்கையான பிறப்புறுப்புகள் இருப்பதால் இவர்களுக்கு குழந்தை இயற்கையாக கருத்தரித்து பிறந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த குழநதைக்கு ஏரியல் என பெயர் சூட்டியுள்ளனர். இவர்களையும் இவர்களது குழந்தையையும் நெட்டிசன்கள் பாராட்டி வாழ்த்தி வந்தனர்.

இது முதல்முறையல்ல
இது போன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரேகானில் ஒரு பெண்ணாக பிறந்து பின்னர் ஆணாக மாறிய ஒருவர் இதே போன்று குழந்தை பெற்றெடுத்தார். டிரைஸ்டன் ரீஸ் என்பவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அவர் ஹார்மோன் தெரபி மேற்கொண்டு ஆணாக மாறிவிட்டாலும் அவருடைய அந்தரங்க உறுப்புகளை மாற்றாமல் அப்படியே வைத்திருந்தார். அவருக்கு ஏற்கெனவே ஒரு முறை கருச்சிதைவு நடந்து பின்னர் கரு உருவாகி குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications