Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதயத்தை கிழித்த புல்லட்.. 5 மணி நேரம் போராட்டம்.. ஷின்சோ அபேயை காப்பாற்ற முடியவில்லை.. டாக்டர்கள்

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்ட நிலையில் அவரை காக்க 5 மணி நேரமாக மருத்துவர்கள் போராடியும் இயலவில்லை என தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    Who Is Shinzo Abe? | துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஷின் சோ அபே... யார் இவர்? *World

    ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்சோ அபே (67) 30 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர். ஜப்பான் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக நீடித்தவர் ஷின்சோ மட்டுமே. இவர் பெருங்குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவர் அறிவுரைபடி தனது பதவியை 2020 ஆம் ஆண்டு ராஜினாமா செய்தார்.

    இந்த சூழலில் நேற்று அவர் ஜப்பானின் நாரா பகுதியில் அதாவது டோக்கியோவிலிருநது 500 கி.மீ. தூரம் உள்ள பகுதியில் ரயில் நிலையம் அருகே தேர்தல் பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்தார். நேற்று காலை 11.30 மணி இருக்கும், அப்போது அவரை பின்புறத்திலிருந்து ஒருவர் சுட்டார்.

    ஆம்புலன்ஸ்

    ஆம்புலன்ஸ்

    இதில் சரிந்து விழுந்த அவரை ஆம்புலன்ஸ் வருவதற்குள் அங்கிருந்த மக்கள் காப்பாற்ற முயன்றார்கள். அதற்குள் ஆம்புலன்ஸ் வந்துவிடவே அவரை நாரா மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவமனையில் மதியம் 12.30க்கு அனுமதித்தனர். அங்கு அவர் இதயம் மற்றும் மூச்சு செயலற்ற நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

    இதயத்தை துளைத்தது

    இதயத்தை துளைத்தது

    அவரது உயிரை காப்பாற்ற பல முயற்சிகளை மருத்துவர்கள் செய்தனர். ரத்தம் ஏற்றப்பட்டது. மாரடைப்புக்கான அனைத்து உயர்தர சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. எனினும் அவர் துரதிருஷ்டவசமாக நேற்று மாலை 5.30 மணிக்கு மறைந்தார். அவரது மார்பு மற்றும் கழுத்து பகுதியில் சுட்டதால் நிறைய ரத்தம் வெளியேறியுள்ளது.

    இரு தோட்டாக்கள்

    இரு தோட்டாக்கள்

    அவரது உடலில் இரு தோட்டாக்கள் துளைத்திருந்தன. அதில் ஒன்று இதயத்தை கிழித்துவிட்டது. இதயத்தில் பெரிய ஓட்டை ஏற்பட்டுவிட்டது. மற்றொன்று காயங்களை மோசமாக்கியது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரை காப்பாற்ற மருத்துவர்கள் 5 மணி நேரம் போராடியும் அது பலனை கொடுக்கவில்லை.

     ஒருவர் கைது

    ஒருவர் கைது

    ஷின்சோ அபேயை டெட்சுயா யமகாமி என்பவர் சுட்டுக் கொன்றார். கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்ற அவரை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அபேயை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் யமகாமி சொந்தமாக துப்பாக்கியை தயாரித்துள்ளது தெரியவந்தது. அவரது வீட்டிலிருந்து வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+