சில நிமிடங்களில் அடுத்தடுத்து சரிந்த மக்கள்! 150 பேர் மூச்சு திணறி பலி! தென் கொரியாவில் நடந்தது என்ன
சியோல்: தென் கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டம் கொடூரமான விபத்தாக மாறிய நிலையில், அங்கு என்ன நடந்தது என்பது குறித்துப் பரபர தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி ஹாலோவீன் கொண்டாடப்படும். இதில் மக்கள் இரவு நேரத்தில் வித்தியாசமான உடைகளை அணிந்து வலம் வருவார்கள்.
முதலில் அமெரிக்காவில் மட்டுமே இது கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இப்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் ஹாலோவீன் கொண்டாட்டங்கள் சிறப்பாகவே நடந்து வருகிறது.

தென் கொரியா
அப்படித்தான் நேற்று இரவு தென் கொரியத் தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டம் நடந்தது. ஆனால், துருதிஷ்டவசமாக இந்த ஹாலோவீன் கொண்டாட்டம் மிகப் பெரிய விபத்தாக மாறியுள்ளது. கிளப் மற்றும் பப்களுக்கு பெயர் போன இடாவோனில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு ஹாலோவீன் கொண்டாட்டத்திற்காக ஒரே இடத்தில் பல ஆயிரம் பேர் ஒன்று கூடினர்.

உயிரிழப்பு
அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக அடுத்தடுத்து பலருக்கும் மாரடைப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. இப்படி பலருக்கும் மாரடைப்பு ஏற்பட்டதால், அடுத்தடுத்து அவர்கள் சரிந்தனர். இந்த மோசமான விபத்தில் குறைந்தது 151 பேர் கொல்லப்பட்டனர்.. மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்குச் சுகாதார பணியாளர்களும், தன்னார்வலர்களும் CPR கொடுக்க முயன்ற போதும், அது பெரியளவில் பலன் தரவில்லை.

நடந்தது என்ன
நேற்று சுமார் ஒரு லட்சம் பேர் அந்த இடத்தில் ஒன்று கூடியதாகக் கூறப்படுகிறது. அப்போது தான் இந்த மோசமான விபத்து அரங்கேறியுள்ளது. இதனிடையே இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கு நெரிசலில் சிக்கியவர்களே இது குறித்து சில கருத்துகளைக் கூறியுள்ளனர். அதாவது அங்குக் கூட்டத்தில் குழப்பம் ஏற்படும் முன்னரே கூட நகரவே முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் இருந்ததாகக் கூறுகின்றனர்.

கூட்ட நெரிசல்
தங்களை மீட்பதற்கு முன் ஒரே இடத்தில் சுமார் 1.5 மணி நேரம் சிக்கியிருந்ததாக இந்தச் சம்பவத்தில் உயிர் தப்பிய ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "அங்கு மிகவும் குழப்பமாக இருந்தது. முதலில் சிலர் வெளியேற முயன்று, அருகே இருந்தவர்களைத் தள்ளினர். இதன் காரணமாகவே அங்கிருந்தவர்கள் கீழே விழத் தொடங்கினர். இது தொடர் நிகழ்வுகளுக்கு வழி வகுத்து, அப்படியே பலரும் கீழே விழுந்தனர். இதனாலேயே பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது" என்றார்.

படத்தில் வருவதைப் போல
இந்தச் சம்பவத்தில் நெரிசலில் இருந்து தப்பியவர்களுக்கு உயிர் பிழைத்துவிட்டனர். நெரிசலில் சிக்கியவர்களுக்குத் தான் மூச்சுத் திணறலும் மராடைப்பும் ஏற்பட்டு உள்ளது. திரைப்படங்களில் வருவதைப் போல அடுத்தடுத்து பலருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு, சரிந்தனர். அவர்களைக் காப்பாற்ற CPR கொடுத்தும் கூட அது பெரியளவில் பலன் தரவில்லை. இந்தச் சம்பவம் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து தீவிர விசாரணைக்குத் தென் கொரிய அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

மோசம்
ஹிப் நைட் லைஃப், பப்கள் என இரவு கேளிக்கை வாழ்க்கைக்குப் பெயர்போன நகரம் தான் தென் கொரியாவின் இடாவோன். இங்கு தான் மோசமான இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே, கொரோனாவால் இந்த நகரம் மோசமான பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டது. இப்போது தான் நகரம் மெல்ல மீண்டு வரும் நிலையில், இந்த மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications