மாஸ் காட்டிய நியூசிலாந்து.. கொரோனாவை ஓட ஓட விரட்டியது இப்படித்தான்!
வெலிங்டன்: கொரோனா வைரசை, தங்கள் நாட்டிலிருந்து ஏறத்தாழ முற்றிலுமாக அகற்றிவிட்டதாக அறிவித்துள்ளது நியூசிலாந்து. பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் எடுத்த சில அதிரடி நடவடிக்கைகள் நியூசிலாந்தை பாதுகாப்பான நாடாக மாற்றியுள்ளது.
Recommended Video
நியூசிலாந்தில் நேற்று புதிதாக, கொரோனா நோயாளிகள் வெறும் 4 என்ற அளவுக்குத்தான் பதிவாகியிருந்தனர். அப்படி என்ன நடவடிக்கைகளை நியூசிலாந்து அரசு எடுத்தது என்பது பற்றிய ஒரு தொகுப்பை பாருங்கள்:
பிப்ரவரி 28 அன்று நியூசிலாந்து தனது முதல் கொரோனா வைரஸ் பிரச்சினையை உறுதிப்படுத்தியது. அதாவது அமெரிக்கா தனது முதல் கொரோனா பாதிப்பை உறுதிசெய்த ஒரு மாதத்திற்குப் பிறகு.

தடை விதிப்பு
மார்ச் 14 அன்று, நாட்டில் 6 கேஸ்கள் இருந்தபோது, நாட்டிற்குள் நுழையும் அனைவரும் இரண்டு வாரங்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவித்தார். மார்ச் 20 ம் தேதி வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இது உலகின் மிகக் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

3வது நிலை லாக்டவுன்
மார்ச் 23 அன்று - 102 உறுதிப்படுத்தப்பட்ட கேஸ்கள் இருந்தன. அதேநேரம் இறப்புகள் ஏதும் இல்லை. ஆனால் அப்போதே நியூசிலாந்து "நிலை 3" லாக்டவுனுக்குள் செல்வதாக ஆர்டெர்ன் அறிவித்தார். அத்தியாவசியமற்ற தொழில்கள் மூடப்பட்டன, நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிகள் மூடப்பட்டன.

4வது ஸ்டேஜ் லாக்டவுன்
முடிந்த அளவுக்கு, வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு நிறுவன உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அத்தியாவசிய தொழிலாளர்களுக்கு மட்டும் பொது போக்குவரத்து இயக்கப்பட்டது. உள்நாட்டு விமான பயணம் தடைசெய்யப்பட்டது. மார்ச் 25 நள்ளிரவில், நியூசிலாந்து 4வது ஸ்டேஜ் லாக்டவுனை அறிமுகம் செய்தது. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டது.

அதிக பரிசோதனைகள்
நியூசிலாந்து பரவலான பரிசோதனையை மேற்கொண்டது. 123,920 பேருக்கு இன்றுவரை அங்கு பரிசோதனை செய்யப்பட்டது. நியூசிலாந்து சோதனை விகிதம், உலகில் மிக அதிகமான தனிநபர் சோதனை விகிதங்களில் ஒன்றாகும், ஒரு நாளைக்கு 8,000 சோதனைகள் வரை செய்யப்படும் திறன் நியூசிலாந்தில் உள்ளது.

ஒற்றை இலக்கம்
ஏப்ரல் 9 ஆம் தேதி, கொரோனா கேஸ்கள் சரிந்தபோதும், பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் எல்லைக் கட்டுப்பாடுகளை இன்னும் கடுமையாக்கினார். இப்போது நியூசிலாந்தில் நோயாளிகள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திற்கு இறங்கத் தொடங்கியுள்ளது. எனவே 3வது ஸ்டேஜ் லாக்டவுனுக்கு தளர்வை கொண்டு வந்துள்ளார் ஜசிந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications