தாய்லாந்து குகையில் சிறுவர்கள் சிக்கியது எப்படி? குகையை பற்றிய பரபர தகவல்கள்
தாய்லாந்து குகைக்கு பிறந்த நாள் கொண்டாட சென்ற சிறுவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
Recommended Video

பாங்காங்: தாய்லாந்தில் உள்ள குகையில் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக சென்ற சிறுவர்கள் கனமழை காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகைக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ஜூ்ன் 23-ஆம் தேதி இளம் கால்பந்து வீரர்கள் தங்களது பயிற்சியாளருடன் சென்றனர். மொத்தம் 12 சிறுவர்களும் ஒரு பயிற்சியாளரும் சென்றிருந்தனர்.

அவர்கள் அங்கு சென்ற போது கனமழை கொட்டியது. இதையடுத்து அவர்களால் வெளியேற முடியவில்லை. குகையானது 10 கி.மீ. நீளம் உடைய குகையில் வெள்ள நீர் புகுந்து விட்டது. குகையும் குறுகலாக இருந்தது.
இதனால் குகையை மழை நீரும் சேரும் சூழ்ந்தது. பெற்றோரை பார்க்க வேண்டும் என்று அனைவரும் உருக்கமாக எழுதிய கடிதம் கிடைத்தது. இந்நிலையில் சிறுவர்கள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டு அவர்களை மீட்க கடந்த 3 தினங்கள் மீட்பு பணிகள் நடைபெற்றன. இதில் இன்று அனைவரும் மீட்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications