''விமானம் கடலுக்குள் விழுந்தது'': இன்மார்சாட் உதவியோடு முடிவுக்கு வந்த மலேசியா!
லண்டன்: இங்கிலாந்தின் இன்மார்சாட் நிறுவனம் 19ம் நூற்றாண்டு இயற்பியல் தத்துவத்தை பயன்படுத்தி தான் மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடித்துள்ளதாம்.
கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து சீனா சென்ற விமானம் மாயமானது. இந்நிலையில் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் பொருட்களை பார்த்ததாக ஆஸ்திரேலியா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெரிவித்தன.
இதற்கிடையே இங்கிலாந்தில் உள்ள சாட்டிலைட் நிறுவனமான இன்மார்சாட் செயற்கைக்கோள்களில் இருந்து கிடைத்த தகவல்களை வைத்து மாயமான விமானம் கடைசியாக எங்கு இருந்தது என்பதை கண்டுபிடித்து மலேசியாவிடம் தெரிவித்தது.

35 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட அந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய செயற்கைக்கோள் ஆபரேட்டர்களில் ஒன்று. அந்த நிறுவனம் 19ம் நூற்றாண்டு இயற்பியல் தத்துவத்தை பயன்படுத்தி விமானம் விழுந்த இடத்தை கண்டுபிடித்துள்ளது.
மாயமான விமானத்தின் தகவல் தொடர்பு சிஸ்டம்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட போதிலும், அதில் இருந்து செயற்கைக்கோளுக்கு சிக்னல் கிடைத்துள்ளது. அதாவது தரையில் உள்ள நிலையத்தில் இருந்து செயற்கைக்கோளுக்கு சிக்னல் சென்றதும் அதில் இருந்து விமானத்திற்கு சிக்னல் சென்றுள்ளது. இதையடுத்து விமானத்தில் இருந்து செயற்கைக்கோளுக்கு சிக்னல் சென்று அங்கிருந்து பூமியில் உள்ள நிலையத்திற்கு சிக்னல் வந்துள்ளது.
இந்த சிக்னல்களை கணக்கிட்டு தான் அந்நிறுவனம் விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்ததை தெரிவித்துள்ளது. இதை வைத்து தான் மலேசிய அரசு விமானம் கடலுக்குள் விழுந்து மூழ்கிவிட்டது என்ற முடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications