வெள்ளக்காடான பிரேசில்! கொட்டித் தீர்த்த கன‌மழை.. நிலச்சரிவில் சிக்கி 96 பேர் பலி.. திக் காட்சிகள்

Subscribe to Oneindia Tamil

ரியோ டி ஜெனிரோ: பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவின் வடக்குப் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு இதுவரை 96 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

பெட்ரோபொலிஸ் நகரத்தில் 6 மணி நேரத்திற்குள் 26 செ.மீ மழை பெய்திருக்கிறது. ரியோ டி ஜெனிரோ நகரில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து, தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரியோ டி ஜெனிரோவில் நேற்று முன்தினம் முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. 30 நாட்கள் பெய்ய வேண்டிய மழை வெறும் 3 மணி நேரத்தில் பெய்திருக்கிறது. நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.

மழை

கடந்த இரு வாரங்களுக்கு முன், பிரேசிலில் தென் கிழக்கு மாநிலமான சாவ் பாவ்லாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் 18 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பிரேசில் தலைநகரை கனமழை புரட்டிப்போட்டு வருகிறது. பெட்ரோபோலிஸ் மற்றும் அதன் சுற்றியுள்ள மலை நகரங்களில் 35 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகி இருக்கிறது. இதனால், நகரம் முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்தது. அதையடுத்து, நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.

உயிரிழப்பு

முதற்கட்ட மீட்புப்பணியின் போது வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருந்தனர். இன்று காலை உயிரிழப்புகளின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. நூற்றுக்கணக்கான கால்நடைகளும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல், விவசாய நிலங்களும் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் கட்டிடங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

மீட்புப் பணி

கனமழை காரணமாக மீட்புப் பணிகள் செய்வதில் இடையூறு ஏற்பட்டது. இதனால் மீட்புப் பணிகள் தாமதமாகவே தொடங்கப்பட்டன. பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. சாலைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போனவர்களை பேரிடர் மேலாண்மை படையினர் தேடி வருகின்றனர். கொட்டும் மழைக்கு இடையே மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

உதவி

உதவி


''பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கடவுள் ஆறுதல் அளிக்கட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்குமாறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளேன்'' என பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ குறிப்பிட்டுள்ளார். ரியோ டி ஜெனிரோவில் ஏற்பட்டிருக்கும் பேரழிவு குறித்த வீடியோக்களைப் பார்க்கும் போதே அழிவின் கோரம் புரிகிறது. விரைவில் ரியோ டி ஜெனிரோவும் அந்நாட்டு மக்களும் பேரிடரில் இருந்து மீண்டு வரட்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+