கிரீன் சிக்னல் தந்த தாலிபான்.. தகர்ந்தது தடை! ஆப்கனில் மேல்நிலை பள்ளிகளுக்கு மாணவிகள் படையெடுப்பு!
காபூல்: ஆப்கனில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் இன்று முதல் மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் 7 மாதங்களுக்கு பிறகு மாணவிகள் ஆர்வமாக பள்ளிகளுக்கு சென்றனர்.
Recommended Video
ஆப்கனில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக வெளியேறின. இதையடுத்து உள்நாட்டு போர் துவங்கியது. 2021 ஆகஸ்டில் ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றி ஆட்சி அமைத்தனர். புதிய தலைவராக முல்லா பாரதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும் ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்க மறுத்து வருகின்றன. இதனால் உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகள் ஆப்கன் அரசுக்கு தடை விதித்துள்ளன.

பெண்களுக்கு கடும் கட்டுப்பாடு
இதற்கிடையே தாலிபான்கள் ஆட்சியில் ஆப்கனில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது. தனியாக வெளியே நடமாடக்கூடாது என தாலிபான்கள் உத்தரவிட்டனர். மேலும் பள்ளி, கல்லூரிகளிலும் மாணவிகள், ஆசிரியைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

12 வயது வரை அனுமதி
இதையடுத்து தாலிபான்கள் சில கட்டுப்பாடுகளை தளர்த்தினர். அதன்படி 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் 7 ம் வகுப்ப வரை பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் மாணவ-மாணவிகள் தனித்தனியே பிரித்து வைக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. மேலும் 8 முதல் அதற்கு அடுத்த நிலையில் உள்ள வகுப்புகளுக்கு மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை. சமீபத்தில் பல்கலைக்கழகங்கள் திறந்தாலும் மாணவர்கள் மட்டுமே சென்றனர். பெரும்பாலானா பெண்கள் செல்லவில்லை.

மேல்நிலை பள்ளிகள் திறப்பு
இந்நிலையில் மார்ச் மாதம் முதல் மேல்நிலை பள்ளிகள் வரை மாணவிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தாலிபான் அரசு அறிவித்தது. அதன்படி இன்று தலைநகர் காபூல் உள்ப பல்வேறு மகாணங்களில் மேல்நிலை பள்ளிகளுக்கு மாணவிகள் ஆர்வமாக சென்றனர். இதன்மூலம் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகளுக்கு மாணவிகள் சென்றுள்ளனர். இருப்பினும் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி வகுப்புகள் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

காரணம் என்ன
இதுகுறித்து ஆப்கனின் கல்வி அமைச்சக செய்தி தொடர்பாகளர் அஜிஸ் அகமது ராயன் கூறுகையில்,‛‛சர்வதேச சமூகத்தை மகிழ்ச்சி அடைய செய்யவே, உலக அரங்கில் எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ பள்ளிகளை மீண்டும் திறக்கவில்லை. எங்கள் மாணவிகளுக்கு கல்வி மற்றும் பிற வசதிகளை வழங்குவதற்காகவே நாங்கள் இதை செய்கிறோம். பள்ளிகளில் 12 முதல் 19 வயது வரையிலான மாணவிகள் அனுமதிக்கப்படுகின்றனர்'' என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications