7 மாதமாக துபாய் முதலாளி சம்பளம் தரலை... கல்யாணத்தை நிறுத்திய ஹைதராபாத் என்ஜீனியர்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் வேலை பார்க்கும் ஹைதராபாத் என்ஜினியர் தன்னுடைய முதலாளி சம்பளம் தராமல் இருப்பதால் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் முகமது அப்துல் காதீர்(30). எலக்ட்ரிக்கல் என்ஜினியர். அவர் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் மாதா மாதம் ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 644 சம்பளமாக வாங்குகிறார். ஆனால் அவர் பணிபுரியும் நிறுவனம் அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் தான் கடைசியாக 3,500 திர்ஹத்தை சம்பளமாக அளித்துள்ளது.

Hyderabad engineer cancels marriage after salary gets delayed in Dubai

அதன் பிறகு சம்பளம் அளிக்காமல் காதீரிடம் வேலை வாங்கி வருகிறது. இந்நிலையில் அவருக்கு இந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சம்பளம் கிடைப்பது தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதால் அவர் தனது திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

திருமணத்தை நிறுத்துவதை தவிர எனக்கு வேறு வழியே இல்லை. சம்பளம் தருகிறோம் காத்திருங்கள் என்று தான் கூறி வருகிறார்கள். என் சகோதரியின் திருமணத்திற்காக இந்தியாவில் ரூ. 6 லட்சம் கடன் வாங்கியுள்ளேன். அந்த கடனை அளித்தவர்களின் மிரட்டல் தாங்க முடியவில்லை. என் சகோதரியின் திருமணத்தை நிறுத்தப் போவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர் என்றார்.

காதீர் தான் பணிபுரியும் நிறுவனம் மீது தொழிலாளர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி புகார் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+