கிரிக்கெட் என்று வந்து விட்டால் பாகிஸ்தான்தான் வெல்ல வேண்டும்.. மண் பாசம் மாறாமல் பேசும் மலாலா
லண்டன்: இந்தியா, பாகிஸ்தானிற்கு இடையே நல்லுறவு நிலவ வேண்டும் என்றாலும் கூட, கிரிக்கெட் என்று வந்துவிட்டால் இந்தியாவை பாகிஸ்தான் எப்போதுமே வெல்ல வேண்டும் என்பது தான் தனது விருப்பம் என அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பெண் கல்வியை முன்னிறுத்திப் போராடியதால் தாலிபன்களால் கொடூரமாகத் தாக்குதலுக்கு உள்ளானவர் பள்ளிச் சிறுமியான மலாலா. சிகிச்சைக்காக லண்டன் சென்ற மலாலா, தற்போது குடும்பத்துடன் அங்கேயே தங்கி கல்வி கற்று வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் மலாலா. அதில் அவர் கூறியதாவது:-

சமூகசேவை...
எதிர்காலத்தில் தாய்நாடான பாகிஸ்தானுக்கு சென்று, அங்கு சமூகச்சேவை ஆற்ற வேண்டும் என்பதே என் ஆசை.

இந்தியாவின் ஆதரவு...
தாலிபான்களின் கொலைவெறி தாக்குதலில் நான் உயிருக்கு போராடிய வேளையில் இந்திய மக்கள் என்மீது காட்டிய அன்பு என்னை வியக்க வைத்தது.

இந்தியாவுக்குச் செல்ல விருப்பம்...
இந்தியாவுக்கும் சென்று டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் பெண்கல்விக்கு ஆதரவாக பிரசாரம் செய்து, இளம்பெண்களை ஊக்கப்படுத்த விரும்புகிறேன்.

கிரிக்கெட்டில்...
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நல்லுறவு நிலவ வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதேவேளையில், இருநாடுகளுக்கும் இடையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் எப்போதுமே இந்தியாவை பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசு...
கடந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசை இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தியுடன் சேர்ந்து மலாலா பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications