தாவூத்துக்கு பயந்து போலீசில் சரணடையவில்லை.. இந்தியா செல்ல விரும்புகிறேன்: சோட்டா ராஜன் பேட்டி
ஜகார்த்தா: தாவூத் இப்ராஹிமுக்கு பயந்துகொண்டு போலீசில் சரணடையவில்லை என்று நிழலுலக தாதா சோட்டா ராஜன் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் ஜிம்பாப்வேக்கு அழைத்து செல்லுமாறு தான் போலீசாரிடம் கூறவில்லை எனவும், இந்தியா செல்லவே விரும்புவதாகவும் சோட்டா ராஜன் தெரிவித்தார்.
இந்தோனேஷியாவின் பாலி தீவு பகுதியில் இந்தியாவால் 20 வருடங்களாக தேடப்பட்டு வரும் நிழலுலக தாதா இன்டர்போல் போலீசாரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

எதிராளியான தாவூத் இப்ராஹிம் ஆட்கள், ராஜனை கொலை செய்ய நெருங்கிவிட்டதை அறிந்தே, போலீசில் ராஜன் சரணடைந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியாவில் பாதுகாப்பில்லை என்றும், ஜிம்பாப்வே சிறையில் அடைக்குமாறும் சோட்டா ராஜன் இந்தோனேஷிய போலீசாரிடம் கூறியதாகவும் சில ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது.
இத்தகவல்களை சோட்டா ராஜன் இன்று மறுத்துள்ளார். இந்தியாவில் இருந்து சோட்டா ராஜனை சந்திக்க சென்ற தொலைக்காட்சி நிருபர்களிடம் ராஜன் கூறுகையில், "நான் இந்தோனேஷியாவுக்கு சரணடைய வரவில்லை. பாலிக்கு வந்து இறங்கியதும் கூட நான் கைது செய்யப்படவில்லை. போலீசார் என்னை கண்டுபிடிக்க காலம் எடுத்துக்கொண்டனர்.
என்னை ஜிம்பாப்வேக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று பாலி போலீசாரிடம் நான் கோரிக்கைவிடுக்கவில்லை. இந்தியா வரவே விரும்புகிறேன். தாவூத் இப்ராஹிம் மீது எனக்கு எந்த பயமும் கிடையாது. இதுகுறித்து மேலும் விளக்கமாக இப்போது பேசவிரும்பவில்லை. இவ்வாறு சோட்டா ராஜன் தெரிவித்தார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications