தாவூத்துக்கு பயந்து போலீசில் சரணடையவில்லை.. இந்தியா செல்ல விரும்புகிறேன்: சோட்டா ராஜன் பேட்டி
ஜகார்த்தா: தாவூத் இப்ராஹிமுக்கு பயந்துகொண்டு போலீசில் சரணடையவில்லை என்று நிழலுலக தாதா சோட்டா ராஜன் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் ஜிம்பாப்வேக்கு அழைத்து செல்லுமாறு தான் போலீசாரிடம் கூறவில்லை எனவும், இந்தியா செல்லவே விரும்புவதாகவும் சோட்டா ராஜன் தெரிவித்தார்.
இந்தோனேஷியாவின் பாலி தீவு பகுதியில் இந்தியாவால் 20 வருடங்களாக தேடப்பட்டு வரும் நிழலுலக தாதா இன்டர்போல் போலீசாரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

எதிராளியான தாவூத் இப்ராஹிம் ஆட்கள், ராஜனை கொலை செய்ய நெருங்கிவிட்டதை அறிந்தே, போலீசில் ராஜன் சரணடைந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியாவில் பாதுகாப்பில்லை என்றும், ஜிம்பாப்வே சிறையில் அடைக்குமாறும் சோட்டா ராஜன் இந்தோனேஷிய போலீசாரிடம் கூறியதாகவும் சில ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது.
இத்தகவல்களை சோட்டா ராஜன் இன்று மறுத்துள்ளார். இந்தியாவில் இருந்து சோட்டா ராஜனை சந்திக்க சென்ற தொலைக்காட்சி நிருபர்களிடம் ராஜன் கூறுகையில், "நான் இந்தோனேஷியாவுக்கு சரணடைய வரவில்லை. பாலிக்கு வந்து இறங்கியதும் கூட நான் கைது செய்யப்படவில்லை. போலீசார் என்னை கண்டுபிடிக்க காலம் எடுத்துக்கொண்டனர்.
என்னை ஜிம்பாப்வேக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று பாலி போலீசாரிடம் நான் கோரிக்கைவிடுக்கவில்லை. இந்தியா வரவே விரும்புகிறேன். தாவூத் இப்ராஹிம் மீது எனக்கு எந்த பயமும் கிடையாது. இதுகுறித்து மேலும் விளக்கமாக இப்போது பேசவிரும்பவில்லை. இவ்வாறு சோட்டா ராஜன் தெரிவித்தார்.
-
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications